Share

Nov 23, 2018

ரெண்டு கால் ஓநாய்


புதுமைப்பித்தன் சொல் திறன்.

மனித ஜென்மத்தை குறிப்பிடும்போது சுருக்கமாக ’இந்த இரண்டு கால் ஓநாய்’ என்பார்.
 
(ஜி.நாகராஜனின் நம்பிக்கையில்லா தீர்மானம் – மனுசன் மகத்தான சல்லிப்பயல்.)
தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி எனும் ரெண்டு கால் ஓநாயாக வரும் நாகேஷ் ஆசுவாசம்
“ அப்பாடா, மைனர் போயிட்டாரேன்னு பக்குன்னு ஆயிடுச்சு, மிட்டாதார் கெடச்சவுன்னே ஜில்லுன்னு ஆயிடுச்சு.”
மகாராஜா நம்பியாரை பார்த்து விட்டு நாகேஷ்
“பெரிய தலப்பாவா கிடச்சிருக்கான்”

வைத்தி கேரக்டர் நாகேஷின் நகாசு வேலையில் நேர்த்தியாக நெய்யப்பட்டிருந்தது. Vaithi planned ruthlessly to cope with his clumsy world.
(மாமாக்காரப்பயன்னு போட்டு உடைச்சிற வேண்டியது தானேய்யா)
எச்சிக்கலை வைத்தி கேரக்டர் பற்றி விளக்கமா சொல்ல கொஞ்சம் கடுமை காட்ட வேண்டும். கழுதை பொச்சுல வடியிற தேன கூட நக்குறவன் தான் தில்லானா மோகனாம்பாள் வைத்தி.
                                                   காலேஜில படிக்கிற காலத்தில ஒரு ரெண்டு கால் ஓநாய் கூடப்படிக்கிறவர்களை பேர சொல்லி கூப்பிடவே மாட்டான். திறம்பாக ’டேய், டையப்பா’ என்றே கூப்பிடுவான். நண்பர்கள் மனசு ’புண்’படக்கூடாதே என்ற காருண்யம் காரணமாக டையப்பாவுக்கு முன்னால் உள்ள ’புண்’ணை நீக்கி விட்டு கண்ணியமாக சத்தமிடுவான் “டேய், ஒன்னத்தாண்டா டேய், டையப்பா”.

http://rprajanayahem.blogspot.com/2018/03/blog-post_26.html







......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.