Share

Jun 19, 2017

துன்பம் நேர்கையில் ஓர் அன்பிலா நெஞ்சு


என்னை ஒரு முதிய எழுத்தாளர் தன் நண்பனாக ஏற்றுக்கொண்டவர்.  பல வருடங்களுக்கு முன் மறைந்து விட்டார்.

மிக மோசமான கடுமையான சிக்கல்கள் வரிசை கட்டி நின்ற போது நல்ல நிலையில் இருந்த அவருடைய ஒரு மகனுக்கு போன் போட்டேன்.
அன்று அவருடைய அப்பாவுக்கு திதி என்று தெரிந்த போது சிலிர்ப்பு எனக்கு. அவர் ஆன்மா தான் தன் மகனுக்கு நான் போன் போடும்படி செய்கிறதோ. என் மீது மிகுந்த அன்பை கடைசி வரை பொழிந்த நல்ல ஆத்மா.

இறப்பதற்கு ஒரு வருடம் முன், தன்னுடைய தொண்ணூற்றைந்தாவது வயதில் தன் நடுங்கும் விரலால் நெகிழ்ந்து எழுதினார் :”நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்.”

“ அப்பாவுக்கு இன்னக்கி திதி கொடுக்கறீங்களா? சந்தோஷம்.”

”உங்க அப்பா என்னை  ’ராஜநாயஹம் கலியுக கர்ணன்’ என்பார்”

’ஆமாமாம்….ஹி…ஹி…ஹி…கெக்கேகெக்கேக்கே.....’.

”உங்க பையன் என்னைப் பற்றி எப்படி குறிப்பிடுவான் தெரியுமா? ’நூறு ரூபாய்க்கு காட்பரீஸ் சாக்லேட் வாங்கிட்டு வருவாரே. அந்த அங்கிள்!’ ”
 ( 1989ல் நூறு ரூபாய்!)

’ஆமாமாம்………..ஹி….ஹி….ஹி…..ஹி…ஹி….
கெக்கேகெக்கேக்கே..கெக்கே... ஞாபகமிருக்கு.’

கலகலப்பாக இது வரை அட்டகாசமாக சிரித்தார்.

என் சிரமம் பற்றி .. ’சின்ன உதவி என்றாலும் பரவாயில்லை. தங்களால் முடிந்ததை செய்யுங்கள்.’

சிரிப்பு காணவில்லை. அவருடைய பேச்சில் சுதி இறங்கி விட்டது.
’அப்பா திதி முடிந்ததும் பார்க்கிறேன்’ -போனை கட் செய்து விட்டார்.
அவ்வளவு தான். பாராமுகம். Negligence.

அல்லல் நீக்க மறுத்த ஓர் அன்பிலா நெஞ்சு.
....................................................

ஷேக்ஸ்பியரின் கிங்லியர் :“ Is there any cause in nature that makes these hard hearts.”

தி.ஜானகிராமன் : ”இந்த மனிதர்கள் தங்களின் நெஞ்சின் ஈரத்தை எந்த கைக்குட்டையால் துடைத்துக்கொள்கிறார்கள். நரகத்தில் நெய்த கைக்குட்டையாலா?”


………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_30.html


http://rprajanayahem.blogspot.in/2008/12/1988.html

1 comment:

  1. நிறையப்பேர் இப்படித்தான். அப்பாவே போயிட்டார் அவர் நண்பருக்கு என்ன ஆப்ளிகேஷன் என்று நினைத்திருப்பார்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.