Share

Aug 11, 2016

ஜோதிலட்சுமி


கனவுத்திரை ஒரு ’செல்ல தேவதை’யை இழந்திருக்கிறது.
A cute Cinderalla!
அந்தக்காலத்தில் ஸ்டில் நாகராஜராவ் நடிகைகளில் சிறந்த அழகிகளாக புஷ்பவல்லி, சாவித்திரி, வைஜயந்திமாலா ஆகியோர் வரிசையில் ஜோதிலட்சுமியையும் நிறுத்தினார். கூடுதலாக ஜோதிலட்சுமி ஒருவர் தான் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய ஒரே நடிகையாக எப்போதுமே நாகராஜ ராவ் உறுதிபடுத்தி சொன்னார்!
இந்த சாமுத்ரிகா லட்சண விஷயத்தில் பலரும் ஜோதிலட்சுமி பற்றியே அன்று குறிப்பிட்டார்கள்.
Body structure துவங்கி ஒவ்வொரு உறுப்புமே அம்சமானது.
 ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தால் மிகப்பெரிய க்ளாமர் நடிகையாகியிருப்பார்.
”கட்டோடு குழலாட, ஆட” பாடலில் எம்.ஜி.ஆரோடு துவங்கி பின்னர் அவர் பல படங்களில் ஆடிய ஆட்டம் விஷேசமானது.
”காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ”
“ ஆடாத உள்ளங்கள் ஆட, ஒரு அச்சாரம் தந்தாலென்ன ”
“பட்டம் விட்டது போல பறக்குதம்மா உன் மேலாடை
குடை ராட்டினம் போல சுற்றுதும்மா உன் பாவாடை”
பாடல்களில் அவருடைய க்ளாமர்!
’உன்னழகை கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்’ இப்படி ஒரு பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டு ’பூவும் பொட்டும்’ படத்தில் இவர் அழகை வர்ணிப்பதாகவே இருக்கிறது!
நின்றால் கோயில் சிலை அழகு, நிமிர்ந்தால் ஆயிரம் கலை அழகு, நடந்தால் அன்னத்தின் நடையழகு, நாடகமாடும் இடை அழகு ….

1960,70களில் விஜயலலிதா(விஜயசாந்தியின் சித்தி), ஜோதிலட்சுமி இருவர் தான் தமிழ்,தெலுங்கு படங்களில் கவர்ச்சி நடிகைகளாக கொடி கட்டியவர்கள்.
1990களில் பிரபலமான ரம்பாவின் தொடைகளுக்கு முன் 1960களில் ஜோதிலட்சுமியின் கால் தொடைகள் மிகவும் கவனிக்கப்பட்டவை.


பாலாவின் ”சேது”வில்  கச்சேரிக்கு வர்றியா என கூப்பாடு போட்ட ஜோதிலட்சுமியின் ’ரிஎண்ட்ரி’ கண்டு அந்தக்கால பெருசுகள் விட்ட பெரு மூச்சு அக்கினிக்குழம்பு ரேஞ்சுக்கு இருந்தது.
காலம் கடந்த பின்னே, காட்சிப்பட்ட அந்த ஆட்டத்தில் தான் என்ன ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி!


..................................

1 comment:

  1. It was my youthful days and we were lucky to have her as the attractive force towards the fair sex.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.