Share

Dec 20, 2015

சாருவும் திஜாவும் ராஜநாயஹமும்



நவம்பர் முதல் வாரத்தில் மணிஜி தண்டோரா
’தினமணி.காமில் உங்களைப் பற்றி சாரு நிவேதிதா குறிப்பிட்டிருக்கிறார்’ என்றார்.


சாரு சொல்லியிருப்பது”அப்போதெல்லாம் என்னுடைய நண்பர்
 R.P. ராஜநாயஹம் ’தி.ஜா.வின் சிறுகதைகளைப் படித்துப் பாருங்கள்’ என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போதுதான் தெரிகிறது, ராஜநாயஹம் சொன்னது எவ்வளவு சரி என்று.”


தி.ஜா பற்றி எப்போதும் சாரு நிவேதிதா கடுமையாக கடந்த காலங்களில் அலட்சியப்படுத்தி எழுதியவர். ஆனால் இவ்வளவு திறந்த மனதோடு தி.ஜாவை அங்கீகரித்திருப்பது அவருடைய மேலான பண்பை காட்டுகிறது.
சாரு பற்றி நான் எப்போதும் ‘ A saint among the writers!' என்றே மலைத்துப்போய் சொல்லியிருக்கிறேன். என்னுடைய எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது அவருடைய இந்த கூற்று.

ரொம்ப வெள்ளந்தியாக இப்படி மற்ற எழுத்தாளர்கள் யாரும் தங்கள் அபிப்ராயங்கள் தவறு என்றெல்லாம் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.வரட்டுப்பிடிவாதமும், ஹிப்போக்ரஸியும் நிறைந்த இண்டலக்சுவல் பூர்ஷ்வாக்கள் நிறைந்த தமிழ் எழுத்துலகில் சாரு நிவேதிதா உன்னதமானவர்.

இதே போல சுந்தர ராமசாமியின் எழுத்தையும் சாரு நிவேதிதா சீராட்டி பாராட்டும் காலம் வர வேண்டும்!


......................................


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.