Share

Jul 18, 2012

நெடுஞ்செழியன்

http://i1.ytimg.com/vi/BKaX1l9PZ2E/hqdefault.jpg

இளந்தாடி வேந்தர் என்று நெடுஞ்செழியனுக்கு பெரியாருடன் இருக்கும்போது பட்டப்பெயர். பெரியார் வெந்தாடி வேந்தர்!கறுப்பு புஷ்கோட்.வெள்ளை பேண்ட்.கறுப்பான இளம்தாடி.இது தான் அன்று 1940களில் நெடுஞ்செழியன்.
கருணாநிதி பள்ளி மாணவனாயிருக்கும்போது நெடுஞ்செழியன் மீட்டிங் நடத்த பணம் வேண்டியிருந்தபோது வீட்டில் வெள்ளி ஜாமான் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து விற்கவேண்டியிருந்தது.
’நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.
 நாவலர் நெடுஞ்செழியன்.
திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர்.
கழகம் கண்ட முக்கிய பேச்சாளர்.


1952ல் முதல் பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. கண்ணதாசன் இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டார் என்ற சிக்கலை முன் வைத்து பிரச்சார திட்ட நகலில் கண்ணதாசன் பெயரை கருணாநிதி நிராகரித்தார். புறக்கணிப்பு.கண்ணதாசன்‘ இது நியாயமா? கருணாநிதி செய்வதை தட்டி கேட்கக்கூடாதா?’என்பதாக நெடுஞ்செழியனிடம் பிராது சொன்னார்.நெடுஞ்செழியன் மிரண்டு ‘கருணாநிதி பஞ்சாயத்து எதையும் தயவு செய்து என்னிடம் கொண்டு வராதே’ என்று ஒதுங்கிக்கொண்டார் அப்போதே.


அண்ணாத்துரையின் மந்திரிசபையில் இரண்டாவது இடம். கருணாநிதியின் மந்திரிசபையில் இரண்டாவது இடம்.

 http://de.academic.ru/pictures/dewiki/78/Nedunchezhiyan_Karunanidhi_MGR.jpg

எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்குவதில் கருணாநிதியிடம் கடுமையாக பிடிவாதம் செய்து அவசர,அவ்சரமாக பத்திரிக்கை நிருபர்களுக்கு எம்ஜிஆர் சஸ்பெண்ட் விஷயத்தை வெளியிட்டவர்.
’அன்றே நாங்கள் அண்ணாவிடம் போகாமல் காமராஜரிடம் போயிருந்தால் எங்களை வேண்டாமென்றா சொல்லியிருப்பார்? ( இந்த இடத்தில் அடக்க முடியாத சிரிப்புடன்) ஊமையன்,உளறுவாயனையெல்லாம் கூடவே சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிற காமராஜர் என்னையும் கருணாநிதியையும் வேண்டாம் என்றா சொல்லிவிடுவார்?”
மேடையில் பேசும்போது விரல்களை ஆட்டி எம்ஜிஆர் பற்றி “ வாழ வந்தாய். எங்கோ கண்டியில் பிறந்தாய். மலையாளி.வாழ வந்தாய். வாழ்ந்து விட்டுப் போ. எங்களை ஆள நினைக்கலாமா?” என ஆக்ரோஷமாக கேட்டவர் நெடுஞ்செழியன்.
“அடுத்தவன் மனைவியை அவன் மனம் பதற,பதற, அவன் கதற,கதற தூக்கிக்கொண்டு வந்த எம்.ஜி.ராமச்சந்திரனா எங்களை கணக்கு கேட்பது” -இப்படி கேட்டவர்.
(வி.என்.ஜானகியின் முதல் கணவர் கணபதி பட். அப்போது ஏழு வயதில் சுரேந்திரா என்று ஒரு மகனும் உண்டு.)

இவ்வளவெல்லாம் பேசி விட்டு எம்.ஜி.ஆர் மந்திரிசபையிலும் இரண்டாமிடம் வகித்தவர்.
அதிமுகவில் நேரடியாக இணைந்து விடவில்லை. இவர் ஒரு மதிமுக ஆரம்பித்தார். மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம். இந்த சர்பத் ஸ்டாலை உடனே,உடனே அதிமுகவில் இணைத்து எம்ஜிஆரிடம் சரணாகதியடைந்தவர்.

கருணாநிதி ‘நெடுஞ்செழியன் பெண்டாட்டிக்கு பயப்படுபவர்’ என்று கிண்டல் செய்த போது நாவலர் பதில் “ உன்னை மாதிரி எனக்கு என்ன வப்பாட்டியா இருக்கு”

’பொண்டாட்டிக்கு  நான் பயப்படுவேன். நீ வப்பாட்டிக்கு பயப்படுபவன்’ என்று அர்த்தம். The other woman is always powerful!


’உதிர்ந்த மயிர்’ என்றுஅலட்சியப்படுத்தப்பட்ட பின்னரும் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும இரண்டாம் இடம் பெற்றுக்கொண்டவர்.
ஜெயலலிதாவுடன் மனஸ்தாபமானபோது ஒரு சுவாரசியம். சுயேட்சையாக சட்டசபைக்கு போட்டியிட்டு நெடுஞ்செழியன் ஒரு ஐநூறு ஓட்டு வாங்கினார். அப்போது அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் எஸ்.வி சேகர் இவரை விட அதிக ஓட்டு வாங்கினார்.

வெற்றிகொண்டான் மேடையில் நெடுஞ்செழியன் ஞாபகம் வந்து விட்டால் சொல்வது “ அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்ட! நல்லா நெடு நெடுன்னு கொழு கொழுன்னு! அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேரு சாப்பிட்டிருக்கலாம். விட்டுப்புட்டோம்.”

அண்ணாத்துரை மந்திரி சபையிலும்,கருணாநிதி மந்திரி சபையிலும்,எம்.ஜி.ஆர் மந்திரிசபையிலும், ஜெயலலிதா மந்திரிசபையிலும் கூட இரண்டாமிடம்.
காலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு காட்டிய கருணையை நெடுஞ்செழியனுக்கு காட்டவேயில்லை.

அவருடைய மனைவி பங்காரு பக்தர்.

நெடுஞ்செழியனுக்கு ஒரே ஒரு பெருமை உண்டு. இரா.செழியன் என்ற சிறந்த பார்லிமெண்டேரியன் இவருடைய தம்பி. திராவிட இயக்கத்தில் மதிக்கத்தகுந்த ஆளுமை இரா.செழியன்.

நெடுஞ்செழியன் மறைந்த போது தி.மு,க தலைவர் இரங்கல்:

“நாவெல்லாம் தமிழ் மணக்க
செவியெல்லாம் தமிழ் மணக்க
சிந்தையெல்லாம் தமிழ் மணக்க
அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர்
தன்மான இயக்கத்தின் தூண்
சாய்ந்துவிட்டதே என
தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார்
அவர் புகழ் வாழ்க!
அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க.”

வலம்புரி ஜான் சொன்னது தான் முழு உண்மை!
“குட்டி ஆடுகளை ஒட்டகங்கள் என்று திராவிட இயக்கம் அறிமுகப் படுத்தியிருக்கிறது என்பதற்கு நெடுஞ்செழியன் தான் தலைசிறந்த உதாரணம்”



http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_08.html


http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_2479.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_3516.html

http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post_08.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post.html




3 comments:

  1. // கருணாநிதி ‘நெடுஞ்செழியன் பெண்டாட்டிக்கு பயப்படுபவர்’ என்று கிண்டல் செய்த போது நாவலர் பதில் “ உன்னை மாதிரி எனக்கு என்ன வப்பாட்டியா இருக்கு”

    //

    பொண்டாட்டிக்கு பயப்படாதவன்தான் வப்பாட்டி வச்சுக்க முடியும் :)

    ReplyDelete
  2. Even Valampuri John's comments are like the speeches of dravidian politicians: they do not make any sense.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.