Share

Jan 19, 2026

Reza Pahlavi and Tarique Rahman

Shakespeare on seizing power

"If it were done when 'tis done, then 'twere well It were done quickly" (Macbeth)

1.Reza Pahlavi 

2. Tarique Rahman 

Exile - Extended holiday?
Exile is an experience and a sentiment.

Dream of a glorious return

Master yourself, and become king of your country.

The future of Iran and Bangladesh?

டிசம்பர் மார்கழி ஜனவரி - தித்தித்தது சிவகுமார் கணேசன் மதிப்பீடு


சிவகுமார் கணேசன் மதிப்பீடு:


தித்தித்தது
டிசம்பர் மார்கழி ஜனவரி
கட்டுரைகள்
R.P.ராஜநாயஹம்
ஜெய்ரிகி பதிப்பகம்
பக்கங்கள் 234,236
விலை ரூபாய் 300,300

தித்தித்தது புத்தகத்தில் 97, டிசம்பர் மார்கழி ஜனவரியில் 95 கட்டுரைகள்.

அவரது வலைப்பூவில்,முகநூலில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

முரசு தொலைக்காட்சியில் அவர் பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து சுவையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

எனக்கு ராஜநாயஹம் நன்கு அறிமுகம் ஆனவர் என்பதால் கட்டுரைகளை வாசிக்கையில் அவர் நேரில் அருகில் அமர்ந்து பேசுவதைக் கேட்பது போலவே இருந்தது.பெரும்பாலும்,சுவையாகப் பேசுபவர்களுக்கு சுவாரஸ்யமாக எழுத வராது and vice versa. ராஜநாயஹம் சார் ஆச்சர்யமான விதிவிலக்கு.பேச்சிலும்,எழுத்திலும் அத்தனை சுவாரஸ்யம்.

திரைப்படத் துறையிலும்,வணிகத்திலும் ஈடுபட்டு அவற்றின் அத்தனை ஆழங்களையும் கண்டுணர்ந்தவர். அதனால்,அவரது எழுத்தில் உண்மை சுடர்கிறது.

தன் அனுபவங்களை சுவையாகச் சொல்லும் அதே நேரத்தில்,தன் பேரிழப்புகளையும்,துயரங்களையும் கழிவிரக்கமின்றி சொல்லக் கூடியவர்.

தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு இலக்கியங்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு எழுத்தாளர்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு ஓவியர்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு கவிஞர்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு இசை மேதைகள்,இசை அனுபவங்கள், தமிழ்,பிற மொழி,வெளி நாட்டு திரைப்படங்கள்,திரை நட்சத்திரங்களின் வாழ்வு,தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,நண்பர்கள்,உடன் பழகியவர்கள்,ஆட்டுப் புழுக்கை போல கவிதைத் தொகுப்புகளைப் போட்டு அதை மோந்து பார்க்கச் சொல்பவர்கள்,மதுரையின் அடித் தட்டு மக்களின் வாழ்வியல்,தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களுடான நெருக்கம் தந்த நல்ல,மோசமான அனுபவங்கள் என அவர் சொல்லிக் கொண்டே போவதைக் கேட்கிற நாம் நெகிழ்கிறோம். சிரிக்கிறோம். புன்னகைக்கிறோம். துயருறுகிறோம். ஆச்சர்யப்படுகிறோம்.அறிந்து கொள்கிறோம்.பிரமிக்கிறோம். 

கார்த்திக் நாயகனாக நடிக்கும் திரைப்படமொன்றில் இவரை நடிக்க வைத்து சில காட்சிகளை எடுக்கிறார் நலன் குமாரசாமி. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.சத்யராஜ் நடிக்கிறார்.வழக்கம் போல் a slip between the cup and the lip என்று அவர் இயல்பாகக் கடந்து போகிறார்.

அந்தத் திரைப்படம் எதுவென்று தெரிகிறதா?வா வாத்தியார்.நல்லவேளை.தப்பித்தீர்கள் சார்.

பேசுவதற்கும்,எழுதுவதற்கும் அவருக்கும்,கேட்பதற்கு நமக்கும் இன்னும் ஏராளமாய் அவருக்கு அனுபவங்கள் மீதமிருக்கின்றன.

Jan 17, 2026

R.P.ராஜநாயஹம் "டிசம்பர் மார்கழி ஜனவரி" - வீரன்மணி பாலமுருகன்


வீரன் மணி பாலமுருகன் :

பொங்கல் விடுமுறைகளில் கிடைத்த இந்த வேலையற்ற நாட்களில் 
நான் வாசித்த புத்தகங்களில் ஒன்று 
பன்முக கலைஞர் R.P. ராஜநாயஹத்தின் "டிசம்பர் மார்கழி ஜனவரி"
எனும் கலை, இலக்கிய, அரசியல், வாழ்வியல் கலைக் களஞ்சியம். 

சுவாரஸ்யமான அழகியல் மிகுந்த பத்திகள் அடங்கிய தொகுப்பு இது. 
தி. ஜா., திலீப்குமார், ஆ. மாதவன், சா. கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, கிருஷ்ணன் நம்பி, முதல் ஆல்பர் காம்யு வரை அலசும் இந்த பத்திகள் இலக்கியத் தாகத்தின் நன்னீர் சுனைகள். 
தன் அனுபவங்களின் நிழல் பாதையில் வாசகனையும் இளைப்பாறச் செய்யும் உபகாரம் கொண்டது 
R.P. ராஜநாயஹத்தின் எழுத்துக் கலை. 

மேலும் இசை, சினிமா, அரசியல் என அவர் தொட்டதெல்லாம் வாசகனின் பசிக்கு தீனியாகும் அமுதசுரபிதான். 

இந்த தொகுப்பில் எதை சிலாகிப்பது எதை விடுவது என குழப்பம் ஒரு வாசகனுக்கு வந்து விடும். 
"இந்த டிசம்பர் மார்கழி ஜனவரி" தொகுப்பில் 88 வது பத்தியாக "சுப்புடு தட்டிப் பார்த்த கொட்டாங்குச்சி" என்றொரு ரசமான பத்தி உண்டு. 
அதை கீழே தருகிறேன்.
 நண்பர்கள் அந்த பருக்கை ஒன்றை சுவைத்துப் பாருங்கள்.
 ராஜநாஹத்தின் அள்ள அள்ள குறையாத தானியக் களஞ்சியத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்வீர்கள்.
------------------------------------------------------------------------------------
சுப்புடு தட்டிப் பார்த்த கொட்டாங்குச்சி" 

தன் 80வது வயதில் சொன்னார். “ இன்னும் ஒரு நாற்பது வருடங்கள் தான் நான் உயிரோடு இருப்பேன்.”
90 வயதில் இறந்தார்.

சுப்புடுவின் கறாரான சங்கீத விமர்சனங்கள். அவருடைய ஹ்யூமர்.
பாலமுரளி, வீணை பாலச்சந்தர் ஆகியோரையெல்லாம் கிண்டி கிழங்கு எடுத்தவர்.

வித்வான்களிடம் சுப்புடுவின் கடுமையான கண்டிப்பான வார்த்தைகள்.

 "ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியே தான் நிற்பார்கள் . 'உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை' என்பது போல."
” வயலின் கன்யாகுமரி இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்குகிற பேர்வழி. விட்டால் கதரி கோபால் நாத்தின் மடியிலேயே உட்கார்ந்து விடுவார்.”
 
சங்கீத பாடகர்கள் சினிமாவில் பாடக்கூடாது என்பது பற்றி நிறைய எழுதியவர். 1940களில் இருந்த சினிமாப்பாடல் கர்நாடக சங்கீதத்தோடு ஒன்றியது. அதைக்காரணம் காட்டி சுப்புலட்சுமி சினிமாவில் பாடவில்லையா? ஜி.என்.பி பாடவில்லையா? என்று சப்பை கட்டு கட்டி, 1990களில் கூட சினிமா பாட்டு பாடலாமா? என்று கறாராக கேட்டார்.சினிமா பாடல்கள் பாடிவிட்டு சங்கீதமும் பாடமுடியாது என்பது சுப்புடு சித்தாந்தம்.சினிமாவில் பாடுவதை கொடிய வியாதியாக சித்தரித்தார்.

ஆனால் உறுத்தும் ஒரு விஷயம். 1983ல் திடீரென்று டி.ராஜேந்தர் பாடிய சினிமாப்பாடல் ஒன்று பற்றி புல்லரித்தார். செடியரித்து மரம் அரித்துப்போனார். தும்பிக்கய ஊனி, நாலு காலையும் தூக்கி, சங்கு சக்கரமா சுத்தி, ’பேஷ், பலே’ என்று ’ஆஹா’காரம் செய்தார்.

இத்தனைக்கும் 1980களில் தரமான எத்தனையோ இளையராஜா பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருந்தன.
1960களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மஹாதேவன் பாடல்கள்? சௌந்தர்ராஜன்,சுசிலா, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள்?

ஆனால் சுப்புடு நெகிழ்ந்து போன அந்தப்பாடல் எது தெரியுமா? டி.ராஜேந்தர் இசையமைத்துப்பாடிய
”தட்டிப்பாத்தேன் கொட்டாங்குச்சி, தாளம் வந்தது பாட்டவச்சி. “
தங்கைக்கோர் கீதம் படத்தில் இந்தப் பாடலை கேட்டு விட்டு கண்ணீர் விட்டு அழுததாக சுப்புடு சொன்ன அபத்தம் இங்கு நடந்திருக்கிறது.அதற்குப் பிறகும் கடைசி வரை கர்னாடக சங்கீத பாடகர்கள் சினிமாவில் பாடிய போது முகம் சுளித்துக்கொண்டே தான் இருந்தார்.

Once in a while, A consistency comes forward that is both sublime and foolish!

நூல் : டிசம்பர் மார்க்கழி ஜனவரி 
ஆசிரியர் : R.P. ராஜநாயஹம் 
பதிப்பகம்: ஜெய்கிரி 
விலை: ரூ 300.


Jan 6, 2026

Double Century

200, 201 Episode 

R.P. Rajanayahem hits Double Century 
In Cinema Enum Bootham serial 

1. Director K. Sankar 

2. Director M.A. Thirumugam
( Thirumugam with his elder brother 
 Sandow M.M.A. Chinnappa Thevar)

Jan 4, 2026

Funny death tributes

இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு நகுலனின் குறிப்பிட்ட இரங்கல் கவிதையை மேற்கோளாக சொன்ன போது அடக்க முடியாமல் திருச்சி தமிழ் இலக்கிய கழக இலக்கிய கூட்டத்தில் வாய் விட்டு சிரித்தார்கள்.

அல்பர் காம்யு 'அந்நியன்' பற்றி ராஜநாயஹம் விரிவாக பேசிய கூட்டம்.
" My mother is dead. Was it today 
or yesterday?"


இலக்கிய கூட்டத்தில் என்றில்லை, கட்டுரைகளிலும் அந்த நகுலனின் கவிதையை மேற்கோள் காட்டியதுண்டு.
" நான் இறந்த பின் இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள். என்னால் வரமுடியாது"


பலரும் பின்னர் நகுலனின் மேற்படி கவிதையை குறிப்பிடுவதை கண்டதுண்டு.

கூத்துப்பட்டறையிலிருந்து பெசண்ட் நகர் ஸ்பேஸஸ் காரில் ந.முத்துசாமி, நடேஷ் இருவருக்கும் நடுவில் அமர்ந்து போகும் போது சாலையில் கடையொன்றில் மாலை முரசு வால் போஸ்டரில் முக்கிய பிரபல மரணம் பற்றி பார்க்கையில் நகுலன் கவிதையை உச்சரித்த போது 
நடேஷ் ரசித்து கல கலவென்று உரக்க சிரித்து ' நகுலனா இப்படி? பிரமாதம்' 

சம்பிரதாய இரங்கல் - Gone from our sight, but never from our hearts.

சிக்கல் என்னன்னா உயிரோடு இருந்தா தான் இரங்கல் சொல்ல முடியும்.

"All tragedies are finished by a death, all comedies by a marriage.” — Lord Byron 

பைரன் எப்பவுமே King of quotations.

"He that dies pays all debts" 

Shakespeare's above quote  offers a practical,
 if bleakly humorous, perspective that death frees one from all earthly obligations. 

"Blest be the man that spares these stones,
And cursed be he that moves my bones."

A Funny humorous Epitaph (Attributed to Shakespeare Himself)
The inscription on Shakespeare's own grave.

Jan 2, 2026

ஜெயரஞ்சன் பேசியது குறித்து சுபகுணராஜன்

Jeyaranjan Jayaraman 
ஜெயரஞ்சன் பேசியது குறித்து 

சுபகுணராஜன்:
Subagunarajan V M S 

Debate போன்ற தளத்திற்காக நேர்காணல் செயபவர்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. Financial management பற்றி பொதுத்தளத்தில் பாஜக, எடப்பாடி போல உளறுபவர்களது '  Echo குரலாக ' கேள்விகளை ஒலித்தால் பேரா ஜெயரஞ்சன் இயல்பாகவே இப்படித்தான் பதிலடி கொடுத்து அதிர வைப்பார். 

நேர்காணலில் தொடர்ந்து, ஒரு அரசு கடன் வாங்க உள்ள கட்டுப்பாடு, விதிமுறைகளைச் சொன்னார். 
தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசின் கடன் 3.5% இருந்து 3% குறைந்துள்ளது என்பதுதான் உண்மை நிலைமை. 
நாலு லட்சம் கோடி ஒன்பது லட்சம் கோடி ஆகிவிட்டது என உளறினால், வருவாய் பெருக்கம்( பண வீக்கம்) போன்ற காரணிகள் கடன் அளவை, எண் / numeral எனும் தளத்தில் உயர்ந்திருப்பதான ' தோற்ற மயக்கத்தை ' ஏற்படுத்தும் என்பதை எத்தனை முறை விளக்கியிருக்கிறார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், Home work பண்ணாமல், தினசரி விவாத அரங்க, நா த க / தா வெ க / பழனிச்சாமி அதிமுக கோவை சத்யன், பாணியில் Debate நேர்காணல் நடந்த முடியாது. 
நீங்களும் முதல் அடியைத் தொடர்ந்த விளக்கங்களை விடுத்து, ' இப்படிப் பேசலாமா ' என விசனம் கொள்ள வேண்டியதில்லை. 

நான் எழுதியுள்ள புள்ளி விவரம் பொதுவெளியில் உள்ளது.

....