Share

Nov 27, 2025

R.P. ராஜநாயஹம் 1987

"Youth is happy because it has the capacity 
to see beauty. Anyone who keeps the ability 
to see beauty never grows old."

- Franz Kafka 

The Passage of Time

R.P. Rajanayahem 1987

வேடிக்க - 55



ரயில் பயணம் மாதம் இருமுறை அவசியமாகி விட்டது.

நெறய்ய வேடிக்க பாக்க வேண்டியிருக்கு.

ஏ.சி. கோச்சில் வடநாட்டு ஆண்களும் பெண்களுமாக சின்ன கூட்டம் நுழைந்து நிற்கவும் உட்காருவதுமாக முரட்டு பிடிவாதம். ரிசர்வ் செய்து உட்கார்ந்திருப்பவர்கள் என்ன சொல்லியும் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஜடங்கள். ரயிலுக்குள்ளேயே ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்டாக நடந்து தாண்டி 
இந்த ஏ.சி. கம்பார்ட்மெண்ட்டில் வசதியாக செட்டில் ஆகிற தீர்மானம். 
ரயில் கிளம்புகிறது.
ரிசர்வ் செய்து பயணம் செய்பவர்களில் ஒருவர் சங்கிலியை இழுத்து... 
ரயில் நின்று விட்டது.
ரயில்வே போலீஸ் உள்ளே வந்து அந்த வட நாட்டு கும்பலை லத்தி சார்ஜ் செய்து தான் ப்ளாட்ஃபார்மில் இறங்கச்செய்தார்கள்.
கம்பார்ட்மெண்ட்டில் உட்கார்ந்திருந்தவர்களில் யாரோ சத்தமாக சொன்னார்.
" வடநாட்டுல இவிங்கல்லாம் ஓட்டு போட்டு தான் அங்க ஜெயிக்கிறானுங்க"

Nov 20, 2025

07. 11 . 2023 க்கு முந்தைய நாள்

1983

கல்யாணத்திற்கு முந்தைய நாள் மாலை, இரவும் சரியான ஐப்பசி மழை.

கல்யாண மண்டபத்தில் ராஜநாயஹத்தின் Full Suit Dress, மணப்பெண்ணின் கல்யாண பட்டு புடவை, தாலி எல்லாம் வைத்து சடங்கெல்லாம் முடித்து 
பத்து மணிக்கு மேல் கிளம்பும் போது 
விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர் பட்டி கிருஷ்ண பிள்ளை சித்தப்பா கல்யாண ஆடைகள், தாலி செயின் வைக்கப்பட்ட சூட் கேஸை கையில் எடுத்து கொண்டார். பக்கத்திலேயே வீடு.
எனக்கு முன்னால் நடந்த கிருஷ்ண பிள்ளை வெளியே வந்தவுடன் மழைத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் சூட்கேஸோடு விழுந்து விட்டார். அவருடைய 'ஐயய்யோ அம்மாடி' கூப்பாடு. பேரதிர்ச்சி.
 கால்வாய் என்ன, மழைநீர் இல்லாவிட்டால் அது சாக்கடையே தான். 

அவரை தூக்கி மேலே விட்டு, முழுக்க மூழ்கி விட்ட சூட்கேஸை மேலே கொண்டு வந்து,  வேதனையோடு வீடு வந்து அவசர அவசரமாக சூட்கேஸை திறந்து...
கோட் முன் மேல் பகுதியில் மட்டும் லேசாக ஈரம். 
நீரால் சுத்தம் செய்து, அயர்ன் பண்ணி ஸ்டேண்டில் தொங்க விட்டாயிற்று. 
பெரியவர்கள் வளமை நோக்கு படி 
 ' த்ருஷ்டி கழிந்தது ' 'கண்டம் கழிந்தது' பெரு மூச்சு.

காலையில் Coat போடுவதற்கு முன் waist                                                  coat ல் எடுக்கப்பட்ட புகைப்படம். 
 ராஜநாயஹத்தின் பின் புறம் ரவி.

ராஜநாயஹத்தின் இந்த குறிப்பிட்ட புகைப்படம் ரொம்ப பிரபலம். 
சுவாரசியமான சம்பவம் எல்லாம் இதை முன் வைத்து நடந்திருக்கிறது.

....

Artificial Intelligence

07.11.1983

Nov 17, 2025

முத்ராமர் மகர்

'இது நம்ம பூமி'. 
ராதா ரவி தயாரிப்பாளர். 
P. வாசு இயக்குநர். 
கார்த்திக் நட்பு பற்றி ராதா ரவி 
பெரும் பூரிப்பில் அந்த சமயம் இருந்தவர். 
'ராசுக்குட்டி' கேமராமேன் எம்.சி.சேகர் தான் 'இது எங்க பூமி'க்கும். 
இயக்குநர் வாசுவின் சொந்த சித்தப்பா.
பழைய பிரபல மேக் அப் மேன் பீதாம்பரத்தின் தம்பி.

'நல்லவனுக்கு கஷ்டம் வந்தா அவனோட போயிடும். கெட்டவனுக்கு கஷ்டம் வந்துச்சின்னா சுத்தியிலும் மத்தவங்களுக்கு பகுந்து குடுத்துடுவான். 
ராஜநாயஹத்துக்கு கஷ்டம் வந்தா ராஜநாயஹத்தோட போயிடும். ஆனா கெட்டவனுக்கு கஷ்டம் வந்தா?..கெட்டவனுக்கு கஷ்டமே வரக்கூடாது' 
என்பார்.

கல்யாண்குமாரும் சேகரும் ' நெஞ்சில் ஓர் ஆலயம் ' நினைவுகளை அசை போடுவதை ராசுக்குட்டி படப்பிடிப்பில் காண முடிந்திருக்கிறது. கல்யாண் குமார் ஹீரோவாக நடித்த ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் சேகர் கேமராவில் உதவியாளராக இருந்தாராம்.

' இது நம்ம பூமி' Shooting schedule போய் விட்டு 'ராசுக்குட்டி'க்கு வந்த போது சொன்னார்.
'வாசு காட்சியை நடித்துக் காட்டினான்.
கார்த்திக் அதை பார்த்து விட்டு நடித்த போது அசந்தே போனேன். என்ன பெர்ஃபான்ஸ் தெரியுமா. வாசு எப்படி நடிக்கனும்னு செஞ்சி காட்டியது நல்லாவே இல்லைன்னு கார்த்திக் நடிப்பில் தெளிவா தெரிஞ்சிது. பிரமாதமா ரொம்ப அழகா இருந்தது.
நான் ஒன்னு சொல்றேன். கமலுக்கு அப்புறம் கார்த்திக் தான் அற்புதமான நடிகன்."

Personality - 

கார்த்திக் ட்ரெஸ் சென்ஸ் பற்றி 
ராதா ரவி : 
சர்ட் பேண்ட்டுக்குள் 'இன்' செய்யாமலே கார்த்திக் ரொம்ப ஸ்மார்ட் ஆக இருப்பார்.

ரஜினி: முத்துராமன் மகன் கார்த்திக்கை முதன் முதலாக பார்த்த போது பெண்மையான  ரொம்ப அழகான பையன்.

https://www.facebook.com/share/p/17c7mPgHJH/

Nov 15, 2025

Story Discussion

பாக்யராஜ் தோட்டத்தில் நல்ல கிணறு. 
பாக்யராஜ் சார் தன் உதவியாளர்கள், கதை இலாகாவினருடன் அவ்வப்போது தோட்டத்திற்கு கதை டிஸ்கஸனுக்காக சென்னையில் இருந்து தோட்டத்திற்கு வருவதுண்டு. 

தோட்டத்தில் டைரக்டர் நடந்து வரும்போது கிணற்றில் பேச்சு சப்தம்.
எட்டிப்பார்க்கிறார். 
உள்ளே அந்த நேர உதவி இயக்குநர்கள் படிகளில் அமர்ந்து இருக்கிறார்கள்.
வி. சேகர் எதிர் காலத்தில் தான் இயக்குநர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எடுக்க ஆசைப்படும் திரைப்படத்தின் கதையை பாக்யராஜின் மற்ற அசிஸ்டெண்ட் டைரக்டர்களுடன் விலாவரியாக விவரித்து விவாதித்துக் கொண்டு..

மேலிருந்து டைரக்டர் பாக்யராஜ் " டேய், இப்ப நான் எடுக்கிற "இது நம்ம ஆளு" படத்து கதையையும் மறந்துடாம கொஞ்சம் பாருங்கடா. "

'ராசுக்குட்டி' படத்திற்காக ஐஸ்வர்யாவுடன் தோட்டக்கிணற்றில் ஷூட்டிங் நடந்த போது இந்த கிணற்று டிஸ்கசன் பற்றி கேள்விப்பட்டேன். 
இப்போது 2024ல் பாக்யராஜ் சாரை 
32 ஆண்டுகளுக்கு பின்னர் 
ராஜநாயஹம் சந்தித்த சமயங்களில் 
இதையெல்லாம் அவரிடம் நினைவு கூர்ந்து பேசியதுண்டு.


வி. சேகரை பார்த்ததே கிடையாது.

இவருடன் மட்டுமல்ல. 
பாண்டியராஜன், பார்த்திபன், ஜி.எம். குமார், லிவிங்ஸ்டன் ஆகியோருடனும் அறிமுகமெல்லாம் கிடையாது.

Nov 11, 2025

கலைஞானம்

கலைஞானம் "இது நம்ம ஆளு"
கிருஷ்ணையராக நடிக்கும் போது பக்கத்தில் காட்சிகளில் துணை நடிகர்கள் நிற்கும் போது சங்கடப்பட்டிருக்கிறார். 
"என்னடா, நான் திரைக்கதை ஆசிரியர், படத்தயாரிப்பாளர். ரஜினி, சிவாஜி படமெல்லாம் எடுத்தவன். இவனுங்க ஷாட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னால, ப்ரேக்ல அண்ணேங்கறானுங்க" ன்னு அய்யரவாயிருந்ததாக 'ராசுக்குட்டி' காலத்தில் பாக்யா ஆஃபிஸில் சொன்னதுண்டு.
சுவாரசியமான typical சினிமாக்காரர். 
சினிமா சம்பந்தப்பட்ட taboos and inhibitions.

பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். கதை சொல்லும் போதே மதுரை profanity கலந்தே வரும். வட்டார கெட்ட வார்த்தைகளோடு தான் 
கதா பாத்திர உரையாடல்.

இதை கூத்துப்பட்டறை ஆசிரியராக நடித்து காட்டியதுண்டு.

"தேனிசை மழை" கதை பாரதிராஜாவிடம் கலைஞானம் சொல்லி இவர் உற்சாகமாக பல மாதிரி உழைத்த பிறகு 
பாரதி ராஜா படம் எடுப்பதாயில்லை என்று சொன்ன போது இழப்பின் வேதனையோடு பின்னாளில் கோபத்தோடு கலைஞானம் சொன்ன வார்த்தைகள் காதிலே இன்னும் ஒலிக்கிறது.

 சென்ற பாக்யராஜ் சாருடன் ப்ரசாத் ஸ்டுடியோ போயிருந்த போது மீண்டும் கலைஞானத்தை சந்திக்க வாய்ப்பு.
ராஜநாயஹம் பெயரை சொன்னவுடன் பக்கத்து சீட்டில் உட்கார சொன்னார்.
சிவகுமார் அப்போது ஹாலில் நுழைந்தவர் கலைஞானத்தை செல்லமாக  " சின்னப்பையன்" என்று விஷ் பண்ணார்.  "அடுத்த சீட்ல உக்காருங்க" என்று அவர் அமர்ந்து கலகலப்பாக பேச ஆரம்பித்து விட்டார்.

Let me tell you, I am not an artist








தர்மேந்திரா, ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் மூவரில் தர்மேந்திராவின் இடம் எது என்பதில் குழப்பமேயில்லை. 
"மற்ற இருவரின் இடத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. அவர்களின் விஸ்வரூபத்தால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்பதாகத் தான் பெர்ஃபான்ஸ்.

திலீப்குமார், தேவ் ஆனந்த்,
ராஜ் கபூர், ஷம்மி, சசி, 
ராஜ்கபூர் மகன்கள் ரந்திர், ரிஷி எல்லோரையும் பார்த்து விட்டு தான் யாதோன் கி பாரத், ஷோலே என்று பட்டையை கிளப்பினார்.

பியார் ஹி ப்யார், தும் ஹஸின் மெய்ன் ஜவான், சீத்தா அவுர் கீத்தா, யாதோன் கி பாராத், ஷோலே - கண்ணுக்குள் நடமாடுகின்றன. 
I am romantic, witty, naughty... and I show that in my acting. 

ரிஷிகேஷ் முகர்ஜியின் சத்யகாம் தர்மேந்திர அவதாரம்.
இதை ஜெமினி கணேஷ் கதாநாயகனாக பாலச்சந்தர் "புன்னகை" யாக ரீமேக் படமாக்கினார்.

"People say that artists come and go but let me tell you I am not an artist" என்பார். மனிதம் மிகுந்தவனாக கர்வம் கொண்டிருந்தவர்.

தி. ஜானகிராமன் "மலர் மஞ்சம்" பாலி போலத்தான் ஹேமா மாலினி.
 இருவரை தன் மனதில் கொண்டிருந்தார். 
தர்மேந்திரா மணமானவர். ஜிதேந்திராவை திருமணம் செய்வது தான் சிலாக்கியமானது என்று கிளம்பி போய் விட்டார். தர்மேந்திரா மனம் தளராமல் (விட்டேனா பார்) ஜிதேந்திராவின் காதலி ஷோபாவை உசுப்பேத்தி " பாரும்மா, ஜிதேந்திரா உனக்கு துரோகம்" என்று ஷோபாவை கூட்டிக்கொண்டு ஸ்பாட்டுக்கே போய் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி பின் ஹேமா மாலினி கரம் பிடித்தார். ஜிதேந்திராவின் மனைவியானார் ஷோபா. 

தர்மேந்திரா சிரிப்பில் ஜவஹர்லால் கொஞ்சமாக ஜவஹர்லால் நேரு சாயலை காணலாம். Beaming smile.

யாதோன் கி பாராத்தில் சீரியஸாக இருக்கும் தர்மேந்திரா கடைசியில் விரிந்த புன்னகை காட்டும் போது தியேட்டரில் அனைவர் முகங்களிலிலும் அந்த சிரிப்பு தொற்றிக்கொள்ளும்.

ஷோலேயில் அடித்த லூட்டி, அமிதாப் செத்தவுடன் "கப்பர்சிங்" என்று வெறியுடன் கிளம்புவது.


Nov 10, 2025

தவசீலி - சுசாந்திகா

விஜய் டிவி பாட்டு நிகழ்ச்சியில தவசீலின்னு பொண்ணு 
"தூதுவள எல அரச்சி தொண்டையில தான் நனச்சி" பாடிய நேர்த்தி.
பாராட்டு குரலுக்கு மட்டுமல்ல.

Graceful Expression. Gesture. Posture.
என்ன இயல்பு தன்மை.

கொஞ்சம் அலட்டினாலும் விரசமாக காட்டி விடும் பாடலை பரிசுத்த தன்மையுடன் பாடினாள்.

இந்த பெண் சினிமாவில் நடிக்க வேண்டும்.

கொஞ்ச நாள் முன்னால சரிகம பதநியில் கோவையை சேர்ந்த பெண் சுசாந்திகா பாடிய " இந்த மன்றத்தில் ஒடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன் " 
காதில் தேன். 

https://www.facebook.com/share/v/1CMXcYq4wH/

https://youtu.be/sft0oPeJtj0?si=ZyXhE7RT_Jxrn5_P

Nov 9, 2025

அஷ்ரஃப் அலிகானோட ஸ்டூடண்ட் கார்த்திக்

ஈகா தியேட்டருக்கு பின்னால் இருந்த மலையாளி முஸ்லிம் ஹாஸ்டலில் சண்முகசுந்தரம் ( முன்னாள் அட்வகேட் ஜெனரல்) ஜஸ்டிஸ் அக்பர் அலி ( காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயிலில் வைத்தவர்) ஜமால் (இன்கம்டாக்ஸ் கமிஷனரானார்) வக்கீல் கலாம் ஆகியோருடன் சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த ராஜநாயஹம்.

எங்களோடு அபுபக்கர் ( மலையாளி) 
அஷ்ரஃப் அலிகான் ( ஆந்திரா).

அஷ்ரஃப் அலிகான் நியூ காலேஜில் விரிவுரையாளர்.

அஷ்ரஃப் அலிகானிடம் தமிழில் " அக்பர் அலி எங்கே" என்றால் 
"இப்பத்தான் வெளிய போச்சி. " 

" அபுபக்கர் எங்கே " 

அஷ்ரஃப் அலிகான் " ஆஃபிஸ்ல இருந்து வந்துடிச்சி. டீ சாப்ட ஹாஸ்டல் மெஸ்ஸுக்கு போயிடிச்சி"

"Shani is not in good mood. கோர்ட்லருந்து கோபமா வந்திச்சி "

ஆடு, மாடு, நாய்க்கெல்லாம் மரியாதை தரக்கூடியவர்.

" இன்னக்கி ஹாஸ்டலுக்குள்ள நாய் வந்துட்டாங்க "

" ரெண்டு கழுத உள்ள வந்து கத்துறாங்க "

" டைரக்டர் ஒன்கு தெரியுமா? Yesterday ஆடுங்க கூட்டமா கெல்லீஸ் ரோட்ல. ஸ்கூட்டர் சிரமப்படுறாங்க. கார், பஸ் நின்னுட்டாங்க."

இந்த அஷ்ரஃப் அலிகான் நியூ காலேஜில் 
வேலை பார்ப்பவர்.

"டைரக்டர், டமில்ல முத்துராமன்னு ஆக்டர் இருக்கா? அதோட மகன் முரளி my student"

முத்துராமன்" பணம் பெண் பாசம் " னு சொந்தப்படத்தில அப்ப  மாணவனாயிருந்த மகன் முரளி தான் தயாரிப்பாளர்.
முரளி தான் பின்னால கார்த்திக்.

"டைரக்டர், ஒன்கு நியூஸ். முரளிய 
ஏதோ பெரிய டைரக்டர் நடிக்க கூப்டுதாம்." 

பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்தில் கதாநாயகனாக புக் செய்த விஷயத்த அஷ்ரஃப் அலிகான் தான் எங்க எல்லாருக்கும் முதல்ல "சொல்லிச்சி".

Nov 8, 2025

Bodies and Wills

Our bodies are our gardens – our wills are our gardeners.” – William Shakespeare 

இரண்டாவது புகைப்படம் 40 வயது சாவித்திரி. இறப்பதற்கு ஆறு வருடங்கள் முன்பு..


 

கேமராவிற்கென்றே வடித்த முகம்  என்றால்  சாவித்திரியின் முகம் தான்.

எப்போதும் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல  பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன். சாவித்திரி போன்ற அச்சு அசலான பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. எத்தனையோ நிராசைகள்.

என்னுடைய சாவித்திரி பாசமலர், பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பான சாவித்திரி.

Our bodies are our gardens. Our wills are our gardeners.

ஆனால் டாக்டர் இந்த புகைப்படங்கள் பார்த்து விட்டு :

Changes in  complexion, skin texture and color can indicate underlying health conition.
 Some of the most common illnesses or health issues that result in facial changes include hormonal imbalances, stress, poor circulation, allergies, poor hygiene and issues..
Habits affect health.

DUDE mighty dialogue

கண்ணதாசன் தன்னிரக்கப்பாடல்கள்  
வெளுத்து நிறமிழந்து 
சலித்துப் போகிறது.

Keep telling
 the same sorrow 
self pity stories 
and
Keep living 
the same poor sorrowful life.

Self-pity is your worst enemy and if you yield to it, you can never do anything wise in this world. 
Self-pity cannot serve as a bright light for a future, no matter how much effort you make.

Prepare to accept the reality.

நிம்மதி என்பதே Myth. 
The intray is never finished. தேடல் இருந்தால் நிம்மதி ஏது?
வித்தையுள்ளவனுக்கும், தேடல், விசாரமுள்ளவனுக்கும் நிம்மதி எதற்கு?

வம்படி சோகத்த
Deconstruct செய்யும் 
DUDE  mighty dialogue 

"அடுத்தவன் ஃபீலிங்ஸ 
க்ரிஞ்சா பாக்கறது தான் இப்ப
ட்ரண்ட்."

Heathy trend

https://www.facebook.com/100006104256328/posts/2588634164683367/?app=fbl

Nov 6, 2025

வேடிக்க - 54

வேடிக்க - 54

இணக்கம் காட்டிய மூன்று பிரமுகர்கள்.

திருச்சியில் இடைத்தேர்தல். 
அன்பில் பொய்யாமொழி மறைவின் காரணமாக.

பிஷப் ஹீபர் காலேஜ் வழியாக முச்சந்தி நோக்கி வாக் போகும் போது பரபரப்பு.
ஜெயலலிதா வேன் வருகிறது. அதில் பக்கவாட்டில் தொற்றிக் கொண்டு மீசை செல்வ கணபதி, செங்கோட்டையன், 
P.H.பாண்டியன். 
முச்சந்தியிலேயே ஜெ பிரச்சாரம் காரணமாக வேன் நிற்கிறது.

செல்வகணபதி அப்போது பாராளுமன்ற உறுப்பினர்.
அருகில் நின்ற செல்வகணபதியிடம் பேச்சு கொடுத்தேன். இதைப்பார்த்து விட்டு செங்கோட்டையன் என்னைப் பார்த்து சிரித்தவாறே வந்து கை குலுக்கினார். உடனே கவனித்து 
P.H. பாண்டியன் வந்து ராஜநாயஹம் தோளில் கை போட்ட போது
 " சார், எனக்கு சொந்த ஊர் செய்துங்க நல்லூர்" 
தோளில் கை போட்ட P.H. பாண்டியன்  தெளிவான திருநெல்வேலி accent ல்
 " அப்டியா, செய்துங்க நல்லூரா?" 
அப்ப தூத்துக்குடி எம்.பி அவர். தூத்துக்குடி தொகுதியில் தான் செய்துங்க நல்லூர்.

மூன்று பிரமுகர்கள் இணக்கம் கவனிக்கும்படியாக இருந்தது.
குறுகிய நேரம் தான்.

மறு நாள் தான் புத்தூர் நால் ரோட்டில் நல்லகண்ணு சந்திப்பு எதிர்பாராமல் வாய்த்தது. கம்யூனிஸ்ட் கூட்டம் கூட          தி.மு.கவிற்கு எதிராகத் தான்.

புத்தூர் நால் ரோட்டில் கலைஞர் கூட்டம் பின்பு பிரமாண்டமாக நடந்தது. 
திருநாவுக்கரசர், வாழப்பாடி, 
கோவை செழியன் கலந்து கொண்டார்கள்.
வாழப்பாடி அதில் மூப்பனாரை கலைஞர் முன்னிலையில் விமர்சனம் செய்தார்.
கோவை செழியன் தன் மரணத்திற்கு பின் கலைஞர் தான் செழியன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கூட்டத்தில்  நின்று கொண்டிருந்த ராஜநாயஹம் சன் டிவியில் தெளிவாக தெரியும்படி காட்டினார்கள்.
 சின்ன சந்தோஷம்.

திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. விற்கு தான் வாக்களித்தேன்.
அண்ணா திமுகவிற்கு எப்போதுமே வாக்களித்ததேயில்லை.