Share

Nov 22, 2020

உருளக்கெழங்கு

 அதிகமாக ஒரு பொருள் விற்பனையானால் Selling like hot potato என்றும் சொல்கிறார்கள்.                               (Selling like hot cakes - இப்படியும்) 


அதுவே makes everyone feels uncomfortable எனும்போது அது Hot potatoes. 

Hot potatoes means a controversial topic. 

சிக்கலான அரசியல் பிரச்னை Hot potatoes. 

Political hot potatoes. 


 பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குள் உருளைக்கிழங்கு முதன் முதலாக 

உருண்டு வந்த போதில் 

அது காமத்தை தூண்டும் வஸ்துவாக கருதப்பட்டதாம். 


சேக்ஸ்பியரின் 'மெர்ரி ஒய்வ்ஸ் ஆஃப் வின்சர்' நாடகத்தில் ஃபால்ஸ்டாஃப் பேசும் வசனத்தில் உருளைக்கிழங்கு மழை பொழிய வேண்டும் என்பான். 

"Let the sky rain potatoes "


உருளைக்கிழங்கு எனக்கு பூரியை நினைவு படுத்தும்.

 எனக்கு மிகவும் பிடித்த காலை உணவு 

பூரி கிழங்கு. மற்ற பட்சணங்களை விட பூரி கிழங்கு  ரொம்ப பிடிக்கும். 

தோசைன்னா மூனு, இட்லின்னா நாலஞ்சு.

 ஆனா பூரி கிழங்குன்னா

 இப்ப கூட வீட்ல எட்டு சாப்பிட்றுவேன்.                             ஒரு பிடி பிடிச்டுவேன். 


மூன்று வயது குழந்தையாய் இருக்கும்போது

 பூரி கிழங்கு ருசியாக எனக்கு செய்து கொடுத்த 

ஒரு அத்தையை நான் 'பூரியத்தை'  என்று அடையாளமிட்டேன். நான் வைத்த  அந்த பெயர் சாசுவத மதிப்பு பெற்றது. எங்கள் குடும்பங்களில் அவருக்கு பெயரே பூரியத்தை தான். இன்று அவர் இறந்த பின்னும் அவரை குறிப்பிட வார்த்தை 'பூரியத்தை' தான். 


பூரியென்றால் உருளைக்கிழங்கோடு தான் சேர்க்க வேண்டும். 

இப்போது சென்னா மசாலா என்று பூரியோடு சேர்ப்பதை வெறுப்பவன் நான். 

என் மகன்களுக்கு பூரியோடு சென்னா மசாலா வேண்டியிருக்கிறது. Generation gap. 


பெரும் செல்வநதரான தந்தை சவ்வாஸ் சாகுல் ஹமீது ராவுத்தர் பற்றி சவ்வாஸ் அக்பர் "எங்கப்பா முதன்முதலா செய்த பிசினஸ் உருளைக்கிழங்கு 

வியாபாரம். பன்னிரெண்டு வயசிலயே எங்க ஊர்லருந்து மேட்டுப்பாளையம் போய் உருளைக்கிழங்கு வியாபாரத்துல நொழஞ்சார். உருளக்கிழங்குல ரொம்ப காலம் நெறய்ய சம்பாரிச்சவர் எங்க அத்தா" 


கனவுல உருளைக்கிழங்க பாக்குறது ரொம்ப யோகம்னு ஒரு நம்பிக்கை. மன நிம்மதி, வசதியான வருவாய் இரண்டுக்கும் 

'கனவில் உருளைக்கிழங்கு' கியாரண்டி! 


கெழவி ஒருத்தி உருளக்கெழங்கு குமுச்சிப்போட்டு யாவாரத்துக்கு ஒக்காந்திருந்திருக்கா. 

ஒரு எளந்தாரி அவ கிட்ட கேட்டான் "எப்டி உருள?" 


கெழவியின்  sarcastic reply " நீ எப்பிடி வேணாலும் உருளு... இப்டி உருளு. அப்டி உருளு"


....... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.