Share

Nov 3, 2020

இன்று மா. அரங்கநாதன் பிறந்த நாள்

 நவம்பர் 3ம் தேதி 

இன்று மா.அரங்கநாதன் பிறந்தநாள். 


நவீன தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க விசேஷ படைப்பாளி. 


நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்


'நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்'

 நேர்த்தியான வார்த்தைகள்.


"மா. அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்று விடுவதில்லை. உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள் "

அசோகமித்திரனின் கணிப்பு.


 மா. அரங்கநாதனின் 'தேட்டை' சிறுகதை

காட்டும் காட்சி.


'நான் இவரோடு வாழ மாட்டேன் ' உதறி விட்டு

இங்கே பாண்டிச்சேரி வந்து சமையல் வேலை செய்து காலம் தள்ளும் அந்த நாகம்மாவை பார்த்து விட தேடிக்கொண்டு வரும் அத்தை என்றழைக்கப்படும் மூதாட்டி


'ஒன்னக் கட்டிக்கிட்டதாலே எனக்கு இந்த நிலை ' என்ற கணவனையும், பெற்ற மகனையும் விட்டு விலகிய நாகம்மா,


யாருமில்லை - ஒன்றுமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டால் -

அவ்வாறு உணரப்பட்டு விட்டால் - இன்னொன்று வருவதற்கு வழி வகை ஏற்படும் என்கிறார்

 மா. அரங்கநாதன்.


பல கதைகள் இந்த வட்டத்துக்குள் தானே சுழலும்.

ஆனால் இதில் வெகு இயல்பாக தலை காட்டும் அந்த முத்துக்கறுப்பன் ஸ்டோர்ஸ்

 பலசரக்கு கடைக்காரர் மூலம்

ஒரு அற்புத தரிசனம்.


இந்த அபூர்வம் தான் மகத்தான மா. அரங்கநாதன்.


அரங்கநாதன் கதைகளில் தொடர்ந்து வரும் முத்துக்கறுப்பன் யார்? என்று கேட்டால்

 "என்னால் விளக்கிச் சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு                  உதவி செய்கிறவன் முத்துக்கறுப்பன்."

என்று தான் சொன்னார்.


அஸ்திரம் தான் முத்துக்கறுப்பன்.


மற்றவரைப்பற்றி கவலைப்படுபவர் இல்லை என்று  சொல்லி விட முடியாது.

நிராதரவும் சக்தி படைத்த ஒன்று தான்.


..


. அரங்கநாதனின் 'அசலம்'

The theatre is so endlessly fascinating because it’s so accidental. It’s so much like life.” – Arthur Miller


ஆர்தர் மில்லர் பிரபலமான அமெரிக்க நாடகாசிரியர் என்று முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது.

  மர்லின் மன்றோவுக்கு 

ஒரு ஐந்து வருடம் வீட்டுக்காரர். புருஷன். 

நாடகாசிரியராக புலிட்சர் விருதெல்லாம் 

வாங்கிய கலைஞர். 


கூத்து நாடகம் என்பது இருக்க 

நாடகம் மேடையேற்றத்தில் நடக்கும் 

விபரீத விபத்தாக நடந்த கூத்து ஒன்றை

 மா. அரங்கநாதனின் 'அசலம்' சிறுகதையில் காணலாம். 


ராமன் வேடங்கட்டிய முத்துக்கறுப்பன் அந்த கூத்தை தன் எண்பதாவது வயதில் சாட்சாத் ஸ்ரீ ராமனிடம் சொல்கிறார். 


" நான் அந்த இடத்தில் ( குடிசைகள் உள்ள குப்பம்) 

இராமன் வேடங்கட்டி சீதா கல்யாணம் நாடகம் போட்டிருக்கேன்.. 

அடுத்த வருசமே அந்த நாடக வாத்தியாரு செத்துப் போனாரு - சீதையா நடிச்சது யாரு தெரியுமா - மேலத்தெரு ஆவுடையப்பன் - இன்னும் இருக்கான். 

என்ன பண்ணினான் தெரியுமில்லே. இராவணன் கழுத்திலே மாலையைப் போட்டுட்டான். "


இராவணன் வில்லை ஒடிச்சுச் தொலைச்சிட்டான். 

லேசா அதைத் தொட்டு கீழே வைக்க வேண்டியது தானே - வித்தையெல்லாம் காட்டி நடிச்சான் - வில்லு படார்னு ஒடிஞ்சது. சீதை என்ன செய்வா - சொல்லிக் குடுத்த மாதிரி 

ஒடிச்சவனுக்கு மாலையிட்டா" 


"வாத்யாரு நேரே வந்து மேடைன்னு கூட பாக்காம அந்த ஆவுடையப்பன அடிச்சாரு பாரு - நான் வந்து வெலக்கினேன் - கொன்னு போட்டிருப்பாரு "


" பொறகு ஒரு வழியா வில்லை திரும்பவும் கட்டி வச்சு இராவணன் ஒடிச்சது வேற வில் - சரியான வில்லு இது தான்னு சனக மகாராசா சொல்லி, நான் ஒடிக்க வந்தேன். என்ன ஆச்சுங்கறே - 

அந்த மாதிரி இருகக் கட்டி வச்சா யார் தான் ஒடிக்க முடியும்.. ? சீதைக்குக் கிடைச்சது எனக்கும் திரை மறைவிலே கிடைச்சது"


....


மா. அரங்கநாதனின் சாகச புனைவுகள்

"எனக்குக் கடவுள் பத்தித் தெரியாது. 

அதனாலே நம்பிக்கையுமில்லே. 

ஆனா இந்தக் கோவில் என்ன பாவம் செய்தது?

நம்ம முன்னோரோட நம்பிக்கை மட்டுந்தான் 

அது காட்டற விஷயம். 

அதை ஏன் உதாசீனம் செய்யனும்? 

அப்படிச் செய்வது வால்யூவா? 

சொல்லப் போனா 

பிளவு படாம தடுக்கிற ஒரு அம்சம் 

இந்தக் கோவில் எல்லாத்திலும் இருக்கு. 


சில காரியங்கள் பிளவை நீக்குமென்றால், 

அது மகோன்னதமானது தான். 

கடவுள் இதற்கு மாற்றானால், 

அந்த நம்பிக்கை இருந்து விட்டுப் போகட்டுமே. "


- மா. அரங்கநாதன்  'திரிசூலம்' சிறுகதையில் 


அரங்கநாதன் கதைகளின் தனித்துவம் பற்றி நினைத்துப் பார்க்கும் போது,

 வாசகனுக்கு அவர் காட்டும் கதையின் 

பூடகத் தன்மை.

 இந்த படைப்புக் கலைஞன் எதையோ மறைக்கிறாராரோ என்ற தவிப்பை வாசகனுக்கு ஏற்படுத்தும் கதை கூறல் பாணி விசேஷத்துவமானது. 

இத்தனைக்கும் எழுது முறை

 அற்புதமான எளிமை கூடியது. 


வாசிப்பவரை மிக Comfortable ஆக Driver's seat ல் உட்கார வைக்கும் நேர்த்தியான form அரங்கநாதனின் craftsmanship. 


இலக்கிய சுவை, இலக்கிய சுகமாக விரியும் வினோத விசித்திரம். 


நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். 

முத்துக்கறுப்பன் பிரம்மாஸ்திரம். 


பிரம்மாஸ்திரம் அபூர்வமாக பயன்படுத்த வேண்டியது என்பது தான் பொதுப் புத்தியில் பதிந்த விஷயம். 

அதெல்லாம் அப்படி இல்லை என்பது

 அரங்கநாதன் படைத்த சாகச புனைவுகள் சொல்லும் சாதனை செய்தி.


.......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.