Share

Sep 23, 2020

மஹி ஆதிரன் கவிதைகள்

 மஹி ஆதிரன் கவிதை 


நிஜத்திலிருந்து நெசத்திற்கு


இன்றொரு விரல் சாலையில் கிடந்தது


கால் சற்று தொலைவில்

தலை சக்கரங்கள் இடையே


ரத்த ச் சாலை கவுச்சி மணம்


குப்பை கொட்ட சாலை கடந்தவனின்

மூளை மிக மிகச் சின்னது

அவனது உள்ளங்கை அளவு


அப்பன் அடித்த அடியில்

 சிதறிக் கிடக்கும்

குழந்தையை மறந்து விட்டாள்


பால் சுரப்பிகள் வெறும் உறுப்பு

தானாய் ஒழுகுகிறது


இன்றிரவு அவள் முலைகளுக்கு

காவலிருப்பாள் கொற்றவை 


வெயிலின் பொருட்டு

பாலும் குருதியும் ஒன்றாய் மணக்கிறது


அந்த குழந்தை உடலுக்கு ஆம்புலன்ஸ்

மிகப் பெரியது


நின்று போன மழைக்கு ஒரு மயிரும் அறிவில்லை


பிணச் சாலையில்

அம்மா என்ற ஒரு குரலை

ஒரு கவ்வியால் பிடுங்கி

நீர் நிறைந்த பாத்திரத்தில் இடும்

மருத்துவர் 


சாவதற்கு பதில் இருமுகிறார்

எனது குளியலறையில்


சம்பவத்திற்கு ஒரு பகா எண்ணை

ஒதுக்கும் நானே அந்த சிறு குழந்தை.


https://m.facebook.com/story.php?story_fbid=2818560615024053&id=100006104256328


மஹி ஆதிரன் கவிதை 


"நகங்களை

கடித்து

உங்கள்

மேல்

துப்புகிறான்

கவிஞன் 


நிலவுத் துணுக்குகள்

என்று பதறும்

திருவாசகர்

உள்ளாடை

மறந்து

குதிக்கின்றனர்


கவிஞன்

திருவாசகர்

தனித்திருக்க


கரையில்

வேட்டியுடன்

சாலையோரச் சிறுமியின்

தலையில்

முத்தமிட்டு

தனதுதட்டின்

ரத்தத்தைத் துடைக்கிறது

வாழ்வு."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.