Share

Jun 7, 2020

பின்னணி பாடகர் எஸ். வி. பொன்னுசாமி



'அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடி வா '
எஸ். வி. பொன்னுசாமி பாடிய பாடல்களில் இது தான் மாஸ்டர் பீஸ். 
சரணத்தில்' கோபுர வாசல் மடியினிலே, மடியினிலே இளம் குமரி உன்னை பார்க்கிறேன், பார்க்கிறேன் ' பிரமாதமாக பாடியிருப்பார். 
ஜமுனா ராணியுடன் இணைந்து. 
எஸ். எஸ். ஆர் படம்' அல்லி '. இதில் அந்தி மலர் பாட்டு ஏ. வி. எம். ராஜனுக்கும் புஸ்பலதாவுக்கும். 

' ஐந்து லட்சம் ' ஜெமினி கணேசனுக்கு 
"எப்படி இருக்கும், என்னென்ன செய்யும்? 
சொல்லால் விளக்க முடியாது,
 சுவைத்தால் அன்றி தெரியாது "

சங்கமம் பாடலொன்று 
" வண்ண பூ போட்ட சேலையொன்றில் புது பொண்ணு பக்கம் வந்தா மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும், "
வெண்ணிற ஆடை நிர்மலா கேள்விக்கு 
" அம்மா மயக்கம் வரும் " என்ற ஜெமினி கணேசன் குரலாக ஒலிப்பது எஸ். வி. பொன்னுசாமி தான். 

'கண் காட்சி 'படத்தில் மனோரமா" காட பிடிப்போம், கௌதாரி பிடிப்போம், காக்கா பிடிக்க மாட்டோம்"
பாட்டில் சுருளிராஜனுக்காக "சீட்டி அடிப்போம், தெம்மாங்கு படிப்போம், டேக்கா கொடுக்க மாட்டோம்" என்ற ஆண்குரல் பொன்னுசாமியுடையது தான். 

நாகேஷுக்கு பின்னணி பாடியவர்களில் ஏ. எல். ராகவன், தாராபுரம் சுந்தர்ராஜன், சாய்பாபா (பாலைய்யா மகன்) இவர்களோடு எஸ். வி. பொண்ணுசாமியும் நகைச்சுவை பாடலுக்கு பொருந்தி வந்தவர். 

'ஆசை அலைகள்' படத்தில் நாகேஷுக்கு 
"சொல்லப்போனா கோவிக்கிறா,
சொல்லா விட்டா மாட்டிக்கிறா "

பொன்னுசாமி சீனியர் பாடகர். 

மகதல நாட்டு மேரி என்ற பழைய படமொன்றில் 
கே. ராணி என்ற பாடகியுடன் "கண்ணும் கண்ணும் ஒன்னுக்கொன்னு" பாடலை பாடியிருக்கிறார். 
அதிலேயே " கதை கேளுங்க, நல்ல கதை கேளுங்க" பாடலும் பொன்னுசாமி பாடியது தான். 

'உத்தமி பெற்ற ரத்தினம் ' ஏ. எல். ராகவனும் பொன்னுசாமியும்
' லல்ல லல்ல லல்லல்லா 'பாடியிருக்கிறார்கள். 

மறக்கப்பட்ட ஒரு நல்ல திரை பின்னணி பாடகர்
எஸ். வி. பொன்னுசாமி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.