Share

Jun 6, 2020

இரவு இந்திரன்

பேராசிரியர் டாக்டர் செ. ரவீந்திரன் தன் பெயரை ஐம்பது வருடங்களுக்கு முன்பு "இரவீந்திரன்" என்று தான் எப்போதுமே குறிப்பிட்டு வந்திருந்திருக்கிறார் 

தமிழ் படிக்க வந்த ஒரு அமெரிக்க பெண் 
"இரவு இந்திரன்" என்று ஸ்பஷ்டமாக உச்சரித்திருக்கிறார். 

அப்புறம் தான் ரவீந்திரன் ஆகியிருக்கிறார். 

பேசும்போது புன்னகையுடன் 
இப்படி அள்ளி தெளித்துக் கொண்டே இருப்பார். 

பேராசிரியர் செ.ரவீந்திரன் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்று பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.

அவரை நான்கு வருடங்களுக்கு முன்பு 
சந்தித்த போது எனக்கு 
ஐன்ஸ்டீன் ஞாபகமும் வந்தது.
 டி.கே.சி ஞாபகமும் வந்தது.
 ரவீந்திரனின் கண்கள் சிரிக்கிறது. 
புருவம் சிரிக்கிறது. மீசை சிரிக்கிறது. 
அவரது தலை முடி சிரிக்கிறது.

ந. முத்துசாமியின் மூத்த மகன் 
ஓவியர் மு. நடேஷுக்கு எத்தனையோ குருநாதர்கள். 
நாடக மேடை ஒளியமைப்புக்கு குரு 
செ.ரவீந்திரன் தான். 

 ” 'நீராகாராம்'அருந்திக்கொண்டிருக்கிறேன்"
என்று செல்பேசியில் அவர் சொன்ன போது முதலில் புரியவில்லை. 

”மது”வைத் தான் ”நீராகாரம்” என்கிறார். 
 ”நீரின்றி அமையாது உலகு” என்றார்.
 
அவரைப்பொறுத்தவரை
 “When your pocket and body permit,
 you can go on drinking”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.