Share

Apr 14, 2019

Funny and Wacky I.S.Johar


ஜோஹர் இந்தி நடிகர். ஹாலிவுட் படங்களில் கூட சின்ன ரோலில் தலை காட்டியிருக்கிறார். லாரன்ஸ் ஆஃப் அரேபியாவில் ஜோஹர் உண்டு.
கடைசி காலங்களில் ஃபிலிம் ஃபேர் பத்திரிக்கையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி பிரபலம்.
His life was funny, weird and wacky.

இந்தர் செய்ன் ஜோஹர். தேவையில்லாமல் கரண் ஜோஹர் அப்பாவா இவர் என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். அப்படியெல்லாம் கிடையாது.
ஐ.எஸ். ஜோஹர் தம்பி யாஷ் ஜோஹர் மகன்
தான் கரண் ஜோஹர்.  
தேவ் ஆனந்த் ஜானி மேரா நாம் தமிழில் ராஜா வாக சிவாஜி நடித்து ரீமேக் செய்யப்பட்டது. அதில் இந்தியில் ஜோஹர் செய்த மூன்று சகோதரர்கள் ரோலை தமிழில் சந்திரபாபு செய்திருந்தார்.
ஜோஹர் பெரும்பாலும் இந்தி படங்களில் ஜோக்கர் தான்.
பாகிஸ்தானியான ஜோஹர் லாகூரில் இருக்கும்போதே ரமாவை மணந்து கொண்டு மும்பைக்கு இருவரும் வந்தவர்கள். சினிமாவுக்காக தான்.
குஷ்வந்த் சிங்கிற்கு லாகூரிலேயே அறிமுகமானவர்கள்.
ரமாவுக்கு ஜோஹர் வாழ்வு சலித்து, விவாகரத்து செய்து கொண்டு ஒரு உறவினரை திருமணம் செய்து கொண்டு அவரையும் ஒதுக்கி விட்டு மீண்டும் ஜோஹருடன் இணையாமல் தொடர்ந்து சந்தித்துக்கொண்டதுண்டு.
குஷ்வந்த் சிங் அப்போது இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் ஆசிரியராக இருந்த நேரம்.

ரமா நடத்திக்கொண்டிருந்த ஹெல்த் க்ளப்புக்கு குஷ்வந்த்சிங் போவார். அங்கிருந்து ஜோஹர் வீட்டுக்கு ரமாவுடன் செல்வார். குஷ்வந்த்சிங்குக்காக ஸ்காட்ச், மூவருக்கும் சாப்பிடுவதற்காக சைனிஷ் வகை உணவு வாங்கிக்கொண்டு ஜோஹர் வர வேண்டியிருக்கும். ஜோஹர் மனைவி ரமா அப்போது மனைவியல்ல. இரண்டாவது கணவரும் சலித்து வெறுத்திருந்த நிலை. ஒரு பெண் நாய் ஜோஹருடைய கம்பானியன் அப்போது. செல்ல நாய் பீனோ. அவருடைய மகள் போல.
ஜோஹர் தான் எழுதிய சுயசரிதை ஒன்றை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் தொடராக வெளியிட முடியுமா? என்று கேட்டு குஷ்வந்த்சிங்கிடம் கொடுத்திருக்கிறார்.
ரொம்ப வேடிக்கையான சுயசரிதை. முதலாவதாக அதில் முதல் மனைவி ரமா பற்றி எதுவுமே எழுதப்பட்டிருக்கவில்லை.
12 வயதில் அவருக்கு செக்ஸ் அனுபவம் அவருடைய அத்தை முறையுள்ள ஒரு அம்மணியுடன். அத்தை இவரை குளிப்பாட்டி விட்ட போது சக்கரை வெடைத்து விரைத்து அதை எப்படி சாந்தப்படுத்த வேண்டும் என்ற வழி முறையை சொல்லித் தந்திருக்கிறாள்.
அந்த சுய சரிதையில் ஜோஹர் சொல்லும் மற்றொரு விஷயம் – வயதில் மூத்த பையன்கள் இவரை குண்டியடித்ததைப் பற்றி. குண்டியடிக்கப்பட்டது மிகப்பெரிய சுகானுபவமாய் ஜோஹருக்கு இருந்திருக்கிறது.
ஒரு பெண்ணோடு கொண்ட உடல் உறவு. அதன் பின் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட அவள் தங்கையை புணர்ந்தது. அதோடு இந்த சகோதரிகளின் தாயார் விருப்பப்பட்டு அம்மணமாய் இவருடைய படுக்கைக்கு வந்து விரக தாபத்தை வெளிப்படுத்தி பிச்சை கேட்ட போது அந்த அம்மணிக்கும் பரோபகாரமாக நெம்புகோலை விளக்கிய நிர்ப்பந்த நிகழ்வு.
இப்படி..இப்படி..
குஷ்வந்த்சிங்கிற்கு வியர்த்து விறுவிறுத்து விட்டது. ஒரு பத்திரிக்கையாசிரியராக அவர் இதை தொடராக வெளியிட்டால் பத்திரிக்கை உரிமையாளர்களின் கோபாக்னி எத்தகையதாய் இருக்க நேரும் என்று அவர் உணர்ந்ததால் ஜோஹரிடம் “ம்ஹும்..நான் மாட்டேன்..போ..” என்று தலையை மறுதலிக்கும் விதமாக ஆட்டியிருக்கிறார்.
“ச்சீ பச்சை துரோகி.. நீ ஒரு கோழை” என்று ஜோஹர் பொங்கியிருக்கிறார்.
இந்தி நடிகர் கபீர் பேடியும், அவருடைய மனைவி ஒடிஸ்ஸி நடனக்கலைஞர் ப்ரோதிமாவும் கலாச்சார மீறலுக்கு பெயர் போனவர்கள்.
ப்ரோதிமா பேடி ஜூஹு பீச்சில் நிர்வாணமாக ஓடுவார்.
”என் மனைவி ப்ரோதிமா ஒரு விபச்சாரி” என்று பகீரங்கமாக கபீர் பேடி பெருமைப்படுவார்.
பூஜா பேடியின் பெற்றோர்.
கபீர் பேடியை ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூரின் ஆக்டோபஸ்ஸியில் பார்க்கலாம்.
கபீர் பேடி, ப்ரோதிமா விவாகரத்து பெற்றார்கள்.
ஒரு நாள் ஐ.எஸ்.ஜோஹரிடமிருந்து உடனே தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி குஷ்வந்திற்கு போன்.

ப்ரோதிமா பேடியுடன் ஜோஹர். வீட்டில் நிறைய பத்திரிக்கையாளர்கள். தகவல் கொடுத்து வரவழைத்திருக்கிறார்.
ப்ரோதிமா பேடியுடன் விரைவில் திருமணம். இருவருக்கும் அன்று நிச்சயதார்த்தம். ஐ.எஸ்.ஜோஹரை விட 28 வயது இளையவர் ப்ரோதிமா.
மறு நாள் பத்திரிக்கைகளின் அலறல் எப்படியிருந்திருக்கும்?
ஏன் ஜோஹர் உறவு என்பது பற்றி அப்போது ப்ரோதிமா சொன்ன வார்த்தைகள் “ It is nice to have Johar at my beck and call."
ஆனால் அந்த திருமணம் நடக்கவேயில்லை. Public Stunt.
ஜோஹர் ரமாவை தவிர நடிகை சோனியா சஹானியையும் திருமணம் செய்ததுண்டு.
அறுபத்து நான்கு வயதில் 1984ல் ஜோஹர் இறந்தார்.
ப்ரோதிமா ஆன்மீக வேட்கையில் சன்னியாசியாக மாறிவிட்டதாக சொன்னார். தலையை மொட்டை போட்டுக்கொண்டார். இமய மலை தன்னை அழைப்பதாகவே நம்பினார். ஆறுமுறை இமயமலை பயணம் செய்தவர். கடைசியில் 1998ல் ஐம்பதாவது வயதில் கைலாஷ் மான்சரோவர் யாத்திரையின் போது நிலச்சரிவில் சிக்கியவரின் உடல் கிடைக்கவில்லை.
ப்ரோதிமா பேடியை விவாகரத்து செய்த பின் கபீர் பேடி பரபரப்பான நடிகை பர்வீன் பாபியுடன் இருந்தார். அப்புறம் இன்னொரு பெண்.


 மூன்று வருடங்களுக்கு முன் தன் எழுபது வயதில், பர்வீண் துசாஞ்ச் என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கபீர் பேடியை விட இவர் 29 வயது இளையவர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.