Share

Nov 22, 2017

திருச்சி ஆல் இண்டியா ரேடியோ


இந்திரா பார்த்தசாரதியின் ’ராமானுஜர்’ நாடகத்திற்கு சரஸ்வதி சம்மான் விருது கொடுக்கப்பட்ட போது திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில் நான் அந்த நாடகம் பற்றி ஒரு உரை (இருபது நிமிடத்திற்கு) நிகழ்த்தினேன்.

அப்போது ரவிசுப்ரமண்யன் இ.பா பற்றி ஒரு டாகுமெண்ட்ரி மூவி செய்ய இருந்த நேரம். இந்திரா பார்த்தசாரதி அவரிடம் என்னிடம் பேசச்சொல்லி ரவி போனில் பேசினதுண்டு. நான் வாசித்த கட்டுரையை அனுப்பி வைத்தேன்.


மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா பற்றி ஒரு இலக்கிய பேருரை ( அரை மணி நேரம் ) நான் திருச்சி ரேடியோவில் செய்திருக்கிறேன். வாசித்த அந்த நீண்ட கட்டுரையை நான் அந்த ரிக்கார்டிங் ரூமிலேயே விட்டு விட்டு வந்தேன்.

இந்தி கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து வாசித்திருக்கிறேன். அந்த கவிதைகளை ஆல் இண்டியா ரேடியோவில் அவர்களே தந்து மொழிபெயர்க்க சொல்லியிருந்தார்கள்.
ஒரு கவிதையை நான் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்ப்பதில் சிரமம் இருந்த போது என் தகப்பனார் எனக்கு உதவியிருக்கிறார்.
மொழிபெயர்த்த கவிதைகளையும் கூட ரிக்கார்டிங் முடிந்ததும் அங்கேயே வைத்து விட்டு வந்தேன்.


நான் திருப்பூர் வந்த பிறகு கூட இவை ரேடியோவில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டதாக திருச்சி நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
………………………………………………..


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.