Share

May 15, 2017

திருப்பதியில் ந.முத்துசாமி


ந.முத்துசாமி திருப்பதிக்கு போயிருக்கிறார். முழுக்கை ஜிப்பா. மூல விக்ரகத்தை நெருங்கும்போது தேவஸ்தான ஊழியரின் சத்தம் காதில் விழும் - ”ஜர்கண்டி,ஜர்கண்டி”. முத்துசாமியை அந்த ஊழியர் அப்படி சொல்லாமல் நின்று சாவகாசமாக சேவிக்கும்படி மிக நீண்ட நேரம் அனுமதித்திருக்கிறார். ஆனால் விந்தை பாருங்கள்! இவர் வெங்கடாஜலபதியை பூஜிக்கவில்லை.
அந்த இடத்தில் தன் குல தெய்வம் செண்டாடுமையனை நினைத்திருக்கிறார்!
இதனை முத்துசாமி சார் சொன்னபோதில் இந்நிகழ்வில் ஒரு poetic quality இருப்பதாக எனக்கு தோன்றியது.


'செண்டாடுமையன் துணை' சிறுகதையில் ந.மு. சொல்வது
“ அவர்கள் கடவுள்களில் ஒருவராகச் செண்டாடுமையனை நினைக்கிறார்கள். நான் அவனை எங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா தெய்வங்களுமே மனிதர்களைப் போலத் தான் என்று எனக்குத் தெரியுமாதலால் நான் ஏன் அவர்களை நம்ப வேண்டும்?”

“ வினவு தெரியாமல் செண்டாடுமையன் என் மனோதத்துவத்தில் ஆழப் பதிந்திருந்த போதிலும் சற்றுக் கூடுதலாக நற்றுணையப்பன் என் ஆளுமையை வகுத்திருக்கிறான் போலும்”

புஞ்சையில் உள்ள நற்றுணையப்பன் கோவிலை ஆதித்ய கரிகாலன் கட்டியிருக்கிறான். இவனை சூழ்ச்சி செய்து நான்கு பிராமணர்கள் மூலம் கொன்று விட்டுத் தான் ராஜராஜ சோழன் மகுடம் சூட்டிக்கொண்டான்?

.................


.................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

http://rprajanayahem.blogspot.in/2015/12/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/…/not-every-friendship-is-…

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.