Share

Jul 30, 2021

ராஜநாயஹத்துக்கு ஏதாவது செய்ய முடியலயே

 மூன்று வருடங்களுக்கு முன்

சாரு நிவேதிதா  தன் ’மயானக்கொள்ளை’ நாடகத்தை கூத்துப்பட்டறையில் வாசித்துக்காட்ட வந்திருந்தார்.

நடேஷ் “ வா, மாப்ள” என்று அன்போடு வரவேற்றார்.


மயானக்கொள்ளை  ஒரு அற்புதப் படைப்பு.


நான் தான் மயானக்கொள்ளையை நடிகர்களுக்கு வாசித்துக் காண்பித்தேன். 

இப்படி வாசிப்பது Closet Drama வகை.


அத்தனை கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நடிப்பையும் வாசிக்கும் போது கொண்டு வரவேண்டும்.

கேட்பவர்களுக்கு காட்சியாக விரியும்.


கேட்டவர்கள் அனைவரும் அதை உணர்ந்தனர்.


சாரு நிவேதிதா “ ராஜநாயஹம், ரொம்ப நல்லா வாசிச்சீங்க. சத்தியமா என்னால நிச்சயமா 

உங்கள மாதிரி வாசிச்சிருக்க முடியாது.” என்று 

ரொம்ப விசாலமான மனத்துடன் பாராட்டினார்.


சாரு சொன்னார்”உங்களுக்கு ஏதாவது செய்ய முடியலயேன்னு எனக்கு வருத்தமா இருக்கு”


 


http://rprajanayahem.blogspot.com/2019/09/blog-post_27.html?m=0

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.