Share

Dec 20, 2020

பொன்னாடை, மாலை, பூச்செண்டு

 R. P. ராஜநாயஹம் ஏற்கும்

 பொன்னாடை, மாலை, பூச்செண்டு 


பா. அசோக் : யாரிடமெல்லாம் என்னால் கற்றுக் கொள்ள முடிகிறதோ.. 

யாரிடம் என்னால் அய்யம் தெளிவுற முடிகிறதோ.. 

யாரிடம் நான் கெட்ட பெயர் வாங்கக் கூடாது என பயந்து நிற்பேனோ.. 

யாரிடம் என்னா எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்பை மட்டும் பெற முடிகிறதோ.. 

அவர்களை என் தந்தைக்கு ஒப்பாகவே அன்பு செய்கிறேன். 

என் ஞான தகப்பன் R. P. ராஜநாயஹம். 


கோபிநாத் :  நான் உங்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் என்பதும் திருப்பதி லட்டு தித்திக்கும் என்பதும் ஒன்று. 


Prof. Fazlulla Khan : I have known you always to be

  a man with cosmopolitan views. 


Ravikumar M. G. R : சிவாஜிக்கு நடிப்பு.

 உங்களுக்கு எழுத்து. 


Raja Ramasamy : எழுத்தின் சுவாரசியம் உங்களால் புது பரிமாணம் கொள்கிறது. நையாண்டியாக பேசி விடலாம். ஈசி. அதை எழுத்தில் முழுவதுமாக நிரப்புவது மிக கடினம். உங்கள் பேனா செய்கிறது. 

நினைவாற்றல் கடல் நீங்கள். 


Ekambaram : அறிவு களஞ்சியம். 

திரைப்படத் துறையில் எழுதி பட்டம் வாங்காத

 Ph. D. அவர். The ultimate in special writings. 

ஓர் அகராதியை புரட்டினால் எளிதில் ஒரு பொருள் விளங்கும். இவர் எழுத முழு பொருளும் விலாவாரியாய் புரியும்.. எழுத்தின் சர்வகலாசாலை அவர். 

ராஜநாயஹம் வாழும் கலைக்களஞ்சியம். 

பாதுகாக்கப்பட வேண்டிய கலைப்பெட்டகம். 


Srivathsan : எனக்கு எப்பவுமே நீங்கள் ஓர் ஆச்சரியம். பரந்து பட்ட அறிவு என்று கேள்வி தான் பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு நிகழ்கால உதாரணம் நீங்கள் தான் சார் 


Shan Bommiah : கவிதை நடை போங்க.. 


Baskar M : என்ன வகை மனிதர் நீங்கள்? 

ஈஸியாக மறக்க முடியவில்லை உங்கள் பதிவுகளை. பல்கலை ஆய்வரங்கம் நீங்கள். 


Mathi Mathi : சார், நீங்கள் எழுதுவதையெல்லாம் படித்து விட்டு, வெறும் தம்ஸ் அப், ஹாட்டின் மற்றும் லாஃபிங் ஸ்மைலியுடன் react பண்ணி விட்டு போய் விடுவது என்பது எனக்கு பெரும் குறையாகத் தோன்றுகிறது. 


Paramasivam S : நாற்பது வருடங்களாக என் ஆதர்சமாக இருக்கும் எழுத்தாளர்களை விட நீங்கள் என்னை வசீகரிக்கிறீர்கள்.. இவ்வளவு நாட்கள் எப்படி நீங்கள் என் கண்களுக்குத் தட்டுப்படவில்லை?  ஆச்சரியம். 


Vasudevan Kathamuthu 

வாசுதேவன் காத்தமுத்து : ராஜநாயஹம் 

ஒரு களஞ்சியம். 

அதை விட முக்கியம் அவருடைய யதார்த்த குணம். நேர்மை. 

எனக்குத் தெரிந்து சாரு நிவேதிதா தான் அவரை சரியாக கணித்தவர். 

'எல்லாவற்றையும் கொடுத்து விட்டு 

பாரதியைப் போல வாழ்பவர்'.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.