ரயில் பயணம் மாதம் இருமுறை அவசியமாகி விட்டது.
நெறய்ய வேடிக்க பாக்க வேண்டியிருக்கு.
ஏ.சி. கோச்சில் வடநாட்டு ஆண்களும் பெண்களுமாக சின்ன கூட்டம் நுழைந்து நிற்கவும் உட்காருவதுமாக முரட்டு பிடிவாதம். ரிசர்வ் செய்து உட்கார்ந்திருப்பவர்கள் என்ன சொல்லியும் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஜடங்கள். ரயிலுக்குள்ளேயே ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்டாக நடந்து தாண்டி
இந்த ஏ.சி. கம்பார்ட்மெண்ட்டில் வசதியாக செட்டில் ஆகிற தீர்மானம்.
ரயில் கிளம்புகிறது.
ரிசர்வ் செய்து பயணம் செய்பவர்களில் ஒருவர் சங்கிலியை இழுத்து...
ரயில் நின்று விட்டது.
ரயில்வே போலீஸ் உள்ளே வந்து அந்த வட நாட்டு கும்பலை லத்தி சார்ஜ் செய்து தான் ப்ளாட்ஃபார்மில் இறங்கச்செய்தார்கள்.
கம்பார்ட்மெண்ட்டில் உட்கார்ந்திருந்தவர்களில் யாரோ சத்தமாக சொன்னார்.
" வடநாட்டுல இவிங்கல்லாம் ஓட்டு போட்டு தான் அங்க ஜெயிக்கிறானுங்க"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.