Nov 6, 2025

வேடிக்க - 54

வேடிக்க - 54

இணக்கம் காட்டிய மூன்று பிரமுகர்கள்.

திருச்சியில் இடைத்தேர்தல். 
அன்பில் பொய்யாமொழி மறைவின் காரணமாக.

பிஷப் ஹீபர் காலேஜ் வழியாக முச்சந்தி நோக்கி வாக் போகும் போது பரபரப்பு.
ஜெயலலிதா வேன் வருகிறது. அதில் பக்கவாட்டில் தொற்றிக் கொண்டு மீசை செல்வ கணபதி, செங்கோட்டையன், 
P.H.பாண்டியன். 
முச்சந்தியிலேயே ஜெ பிரச்சாரம் காரணமாக வேன் நிற்கிறது.

செல்வகணபதி அப்போது பாராளுமன்ற உறுப்பினர்.
அருகில் நின்ற செல்வகணபதியிடம் பேச்சு கொடுத்தேன். இதைப்பார்த்து விட்டு செங்கோட்டையன் என்னைப் பார்த்து சிரித்தவாறே வந்து கை குலுக்கினார். உடனே கவனித்து 
P.H. பாண்டியன் வந்து ராஜநாயஹம் தோளில் கை போட்ட போது
 " சார், எனக்கு சொந்த ஊர் செய்துங்க நல்லூர்" 
தோளில் கை போட்ட P.H. பாண்டியன்  தெளிவான திருநெல்வேலி accent ல்
 " அப்டியா, செய்துங்க நல்லூரா?" 
அப்ப தூத்துக்குடி எம்.பி அவர். தூத்துக்குடி தொகுதியில் தான் செய்துங்க நல்லூர்.

மூன்று பிரமுகர்கள் இணக்கம் கவனிக்கும்படியாக இருந்தது.
குறுகிய நேரம் தான்.

மறு நாள் தான் புத்தூர் நால் ரோட்டில் நல்லகண்ணு சந்திப்பு எதிர்பாராமல் வாய்த்தது. கம்யூனிஸ்ட் கூட்டம் கூட          தி.மு.கவிற்கு எதிராகத் தான்.

புத்தூர் நால் ரோட்டில் கலைஞர் கூட்டம் பின்பு பிரமாண்டமாக நடந்தது. 
திருநாவுக்கரசர், வாழப்பாடி, 
கோவை செழியன் கலந்து கொண்டார்கள்.
வாழப்பாடி அதில் மூப்பனாரை கலைஞர் முன்னிலையில் விமர்சனம் செய்தார்.
கோவை செழியன் தன் மரணத்திற்கு பின் கலைஞர் தான் செழியன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கூட்டத்தில்  நின்று கொண்டிருந்த ராஜநாயஹம் சன் டிவியில் தெளிவாக தெரியும்படி காட்டினார்கள்.
 சின்ன சந்தோஷம்.

திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க. விற்கு தான் வாக்களித்தேன்.
அண்ணா திமுகவிற்கு எப்போதுமே வாக்களித்ததேயில்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.