Oct 23, 2025

மனோரமா மகன் பூபதி

மனோரமா மகன் பூபதி 
- R.P. ராஜநாயஹம் 

சாவு சில காட்சிகளை பின்னோக்கி கிளர்த்துகிறது.

தி. நகர் பஸ் நிலையம் எதிரில் இருந்த மேன்சனில் தங்கியிருந்த சமயம் அது.

பூபதியின் காரில் அங்கிருந்து பனகல் பார்க் வழியாக இயக்குநர் ரா.சங்கரனை சந்திக்கப்போன போது ராஜநாயஹம் 
" இப்ப நீங்க நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே?"
காரை ஓட்டிக் கொண்டே பூபதி: 'Why not? Why not? While the offer flows in, why not?'

உதிரிப்பூக்கள் படத்தில் துவங்கி, மணல் கயிறு போல சில படங்கள்.

"Why not, why not? While the offer flows in, why not?"
விஷயத்தை பல வருடங்கள் கழித்து 1992ல் ராசுக்குட்டி ஷூட்டிங்கிற்காக மனோரமாவுடன் மகன் பூபதி வந்திருந்த போது மீண்டும் ஞாபகப்படுத்தினேன்.

அப்பா எஸ்.எம். ராமநாதன் முக சாயல் பூபதிக்கு.

அம்மாவை 'பாப்பா பாப்பா' என்று எப்போதும் அழைக்கும் பூபதி.

முதல் மனைவி எழுத்தாளர்மணியன் மனைவியின் சகோதரி என்று சொல்வார்கள். மனோரமா அந்த திருமணத்தில் பேசும்போது அழுதார். திருமணம் நீடிக்காத போது இரண்டாம் திருமணத்தின் போதும் மனோரமா தேம்பினார்.

ராசுக்குட்டி ஷூட்டிங் போதும் மனோரமா 
 " பூபதி இப்பவும் குழந்தை தான். அம்மா தான் அவனுக்கு எல்லாம். "

மாஸ்டர் தசரதன் பற்றி( தசரதன் இயக்கத்தில் சுவாமி ஐயப்பன் படத்திலும் நடித்தவர் தான்)
பூபதி" பதினஞ்சாயிரம் கடன் வாங்குனார். அப்புறம் என்னய பாக்காம பதுங்கிக்கிறாரு"

ரொம்ப செல்லமா வளந்த பிள்ளை.
பள்ளிப்படிப்பு 
ஊட்டி லவ்டேல்.

மனோரமாவுக்கு ராஜநாயஹம் இரங்கல் குங்குமத்தில் பத்து வருடங்களுக்கு முன் வெளி வந்தது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.