Oct 17, 2025

வஹாப் காஷ்மீரி

வஹாப் காஷ்மீரி 
- R.P.ராஜநாயஹம் 


ரஜினிகாந்த் பிரபலமான போது 
கண்ணதாசன் 
 " ரஜினிகாந்த் பார்ப்பதற்கு 
சாயலில் நடிகர் வஹாப் காஷ்மீரி போல் இருக்கிறார்.இவருடைய மூக்கு வஹாப் காஷ்மீரி மூக்கு போலவே தான் தெரிகிறது"

கண்ணதாசன் தயாரித்த சிவகங்கை சீமை (1959). வெல்ஷ் துரை ஆக வஹாப் காஷ்மீரி நடித்தார்.

கட்டபொம்மன் படத்தில் வந்த வெள்ளைக்காரர்கள் பானர்மென் ஜாவர் சீத்தாராமன், ஜாக்சன் பார்த்திபன் 
 இவர்களை விட  வெல்ஷ் துரை
 வஹாப் காஷ்மீரி பிரமாதமாக ஒரிஜினல் வெள்ளைக்காரர் போல தோற்றம்.
'ஊமைதுரை' உச்சரிப்பு கூட வெள்ளைக்கார தோரணை.

கட்டபொம்மனில் 
பானர்மனும் ஜாக்ஸனும் தமிழில் வசனம் பேசினார்கள். 
சிவகெங்கை சீமையில்
வெல்ஷ் துரை அருமையான ஆங்கிலம் பேசுவது சுவாரசியம்.

How do you do, Mr. Marudu?
Marudu brothers are loyal to our company.
What a surprising situation.

Frankly Mr. Marudu, I have reliable information that you are sheltering Oomaidurai.

We hope to meet you with Oomaidurai within a week.

Actor Wahab Kashmiri's remarkable posture, gesture and movement.

கலைஞர் வசனமெழுதி தயாரித்த சிவாஜி சாவித்திரி 'குறவஞ்சி'(1960) மன்னனாகநடித்தார் வஹாப் காஷ்மீரி.
" மன்னா பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே  
விடுகிறார்கள் "

இந்த படத்தின் போஸ்டரிலேயே இடம் பெற்றிருந்தார்.

1952 ல் வந்த 'ராணி'.தமிழில் எஸ்.பாலச்சந்தர், பானுமதி நடித்தார்கள்.

இந்தியில் அனூப் குமார். அசோக் குமார், கிஷோர் குமார் இருவரின் உடன் பிறந்த சகோதரர் அனூப் குமார். 
பானுமதி இந்தியிலும் கதாநாயகி.
எல்.வி. பிரசாத் இயக்கிய ஜூபிடர் சோமு தயாரிப்பு 'ராணி'.
வஹாப் காஷ்மீரி இந்த இரு மொழி படத்தில் முக்கிய நடிகர். போஸ்டரில் கதாநாயகன், நாயகியோடு இவரும் இடம் பெற்றார்.

ஜெயகாந்தன் 'யாருக்காக அழுதான்' (1966)
குடிகார சேட்.

இவருடைய காலம் ரொம்ப ஓடி விட்ட பின் பெரியகுளத்தில் தென்கரை பஜாரில் 
குதிரை வண்டியில் உட்கார்ந்து வந்த வஹாப் காஷ்மீரியை 
பார்க்க வாய்த்தது. குதிரை வண்டியில் இருந்து இறங்கி (கையில் crutch)
M.N.P. store சர்புதீனிடம் 
 " என்னடா சர்ப்பு"
சர்புதீன் முகத்தை திருப்பாமல் கண்ணால் அரை பார்வை பார்த்து 
" வாய்யா வகாப்பு".

பெரியகுளத்தை ஒட்டிய பகுதியில் சொந்தமாக சின்ன நர்ஸரி பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்த வஹாப் காஷ்மீரி
English accentல் தமிழில் 
" டேய் ஒங்காளு எரநூறாவது படம் 'திரிசூலம்' பாத்திட்டியா" சர்புதீனிடம் கேட்டார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.