Jul 13, 2024

R.P. ராஜநாயஹம்

R.P. ராஜநாயஹம் பற்றி

மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர்.
அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்.

கி. ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.

அசோகமித்திரன் : நீங்கள் என்னை 
மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். 
தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.

டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: 
அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு! அறிந்தவர் அறிஞர். நீங்கள் நன்கு அறிந்தவர். எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். 
சரி துணைவேந்தரைத் தவிர 
வேறு யார் பட்டம் கொடுக்க முடியும்?

சாரு நிவேதிதா : ராஜநாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம்.
ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். ஹாலிவுட் சினிமா பற்றி அவர் ஒரு புத்தகமே எழுதலாம்.
அறிவினால் வியக்க வைத்தவர் RP ராஜநாயஹம். எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர்! இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.

எஸ்.ராமகிருஷ்ணன் : ராஜநாயஹம் ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்.

யமுனா ராஜேந்திரன் அவர்கள் ராஜநாயஹத்துக்கு சூட்டிய பட்டம்
 - ‘எழுத்தாளரின் எழுத்தாளர்’

பாரதி மணி : 'அண்டி உறப்பு 'ராஜநாயஹம்.
சில உண்மைகளையும்,
 தன் மனதில் இருப்பதை வர்ணம் பூசாது, வெளியே சொல்லவும், 
ஒரு தைரியம் வேண்டும்.
அந்த நெஞ்சுரம், ‘தில்’, 
மலையாளத்தில் ‘அண்டி உறப்பு' 

..............

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.