Oct 23, 2022

பா.செயப்பிரகாசம்

1990. புதுவை.
கி.ரா லாஸ்பேட்டை வாடகை வீடு. 

கி.ரா சில விநாடிகள் உற்றுப் பார்த்து விட்டு 
"ஓ, ராஜநாயஹம்'

"சில நேரங்கள்ல இப்படி ஆகிடுது. இடைச்செவல்ல மதிய வெய்யில் நல்லா கொளுத்துது.சரியான புழுக்கம். எழுதிக்கிட்டு இருக்கேன். 
குள்ளமா வேர்த்து விறுவிறுத்து வந்து முன்னால நின்னு சிரிக்கார்.
யாருன்னு கேக்கேன். தெரியலியான்னு சிரிக்காரு.

சட்டுன்னு ஞாபகம் வர்து.
ஓ! செயப்பிரகாசம்.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். நல்லா பழகுனவரவே யாருன்னு கேட்டுட்டேன் பாத்துக்கிடுங்க.."


1981ல 
மதுரை 

மீனாட்சி புத்தக நிலையத்தில்                 பா.செயப்பிரகாசத்தின்
 "காடு" வாங்கி, 
சரவணன் மாணிக்கவாசகமும் நானும் படிச்சிருக்கோம்.
சூரிய தீபன் 'இரவுகள் உடையும்' படிக்க கிடைக்கவில்லை.
சூரிய தீபன் தான் பா.செயப்பிரகாசம்னு சொன்னாங்க.

2016

சென்னையில் 
கே.ஏ. குணசேகரன் இரங்கல் கூட்டத்தில் பார்த்த போது
பா.செயப்பிரகாசம்  விசிட்டிங் கார்டு கொடுத்தார்.

2020

பா. செயப்பிரகாசம் கடுமையாக ஜெயமோகன் தாக்குதலுக்கு உள்ளான போது, 
செயப்பிரகாசத்திற்கு ஆதரவாக திரண்டு கையெழுத்திட்ட எழுத்தாளர்கள்...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.