Aug 12, 2021

ச. முருக பூபதி வாட்ஸ் அப்பில் ராஜநாயஹத்துடன்

 ராஜநாயஹத்தின் எழுத்துப்பதிவுகள் ஒவ்வொன்றும் சிறுகதை, குறுநாவல், நாவல் போன்ற பெரும் புனைவுக்கானது என்று சொல்லப்படுவதுண்டு. 

ஆதங்கம் "கதை, நாவலா எழுதாம இப்டி செய்றீங்களே" 


 ச. முருக பூபதி பார்க்கும் பார்வை -

" 'பெரும் கட்டுரைகளுக்கான குறிப்புகள்' 

ராஜநாயஹம் பதிவுகள் "


ஆனால் உண்மையில் கட்டுரை எனும் வடிவத்தையே உடைத்தவன் ராஜநாயஹம். 


கோணங்கியின் தம்பி 

நாடக காவலன் ச. முருக பூபதி

Whatsappல் சென்ற ஜூன் 27 ம் தேதி 

R. P. ராஜநாயஹத்துடன் சின்ன உரையாடல் 


முருக பூபதி : அண்ணே, உங்களுடைய பெரும் கட்டுரைகளுக்கான ஃபேஸ்புக் குறிப்புகள் எல்லாவற்றையும் மாக்ஸிமம் படித்து விடுகிறேன். 

என்றுமான வாழ்த்துகள். 

இரண்டு நாள் மணல் மகுடிக்கு வந்து நடிகர்களோடும் கோணங்கியோடும் தங்கிப் போக ஒரு சூழலை உருவாக்குங்கள்??? 


R. P. ராஜநாயஹம் : இப்போதுள்ள சூழலில் 

எங்கும் வர முடியாத நிலை உள்ளது என்பதை அறிவீர்கள். 

கோணங்கியையும் உங்களையும் சந்திக்க, 

நடிகர்களையும், நாடகத்தையும் பார்க்க பெரும் ஆவல் தான். 

நினைப்பதெதுவும் நடப்பதில்லை. 

பாருங்க, Life is so harsh. அதிர்ச்சியில் தானே எல்லோருமே இருக்கிறோம். 

உங்கள் அன்புக்கும் அபிமானத்திற்கும் நெகிழ்கிறேன். 


 ச. முருக பூபதி : எல்லாம் ஃப்ரியானதும் நடக்கட்டும். 


ராஜநாயஹம் : ஆமாம் தம்பி, கோணங்கிக்கு 

என் அன்பைத் தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.