May 22, 2020

ஏலி, ஏலி, லேமா சபக்தானி



முந்தைய நாள் மயங்கி விழுந்தவர் காருக்குறிச்சி அருணாச்சலம் மருத்துவ மனையில் அடுத்த நாள் கண் விழித்த போது ஆறாத்துயருடன் வாய் திறந்து சொன்ன வார்த்தைகள்
'எனக்கு இப்படி ஆயிடுச்சே,
நான் புள்ளக்குட்டிக்காரன் '
இது தான் கடைசி வார்த்தை.  கோமாவுக்கு போய் விட்டார். மறு நாள் மறைந்தார்.

க.நா.சு இறந்த பின் அவருடைய மனைவியார் டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய போது        முன்றில் மா. அரங்கநாதனும், சா.கந்தசாமியும் மயிலாப்பூர் சென்று துக்கம் விசாரித்தார்கள்.
"நான் தூங்கிவிடக்கூடாது - தூங்கினால் போய் விடுவேன் " என்றும் தன் அம்மாவின் உருவம் தெரிகிறது என்றும் க. நா. சு கடைசியாகக் கூறினாராம்.

கே.பாலசந்தர் மரணப்படுக்கையில் இருக்கும்போது
தன்னிடம்  சொன்னதாக வசந்த் சொன்னது -
“ வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்பது இப்பத்தான்டா புரியுது..”

பாலு மகேந்திரா இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன்
பாலாவிடம் சொன்னாராம்: “என் கண்ணை கவனிக்கச் சொல்லி டாக்டரிடம் சொல். என் கண்ணில் தான் அடிபட்டிருக்கிறது. கண் தான் எனக்கு முக்கியம்...”

......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.