Jan 5, 2020

காலேஜுக்கு குதிரையில


”ராஜநாயஹம் காலேஜுக்கு குதிரையில வருவான்”
- ட்ராட்ஸ்கி மருது

நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது இப்படியும் செய்திருக்கிறேன் என்பதை இன்று நினைவு கூர ஓவியர் மருது இருக்கிறார்.

ஞாபக அடுக்கில் இருந்து இதை எடுத்து நானும் பார்க்கிறேன்.
A blundering boy.
அவர் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் படித்தவர்.
கோரிப்பாளையம், நரிமேடு தான் ட்ராட்ஸ்கியின் பால்யம் துவங்கிய இடம்.
கோரிப்பாளையம் கங்காணி மருதப்பன்
அவருடைய அப்பா.
அமெரிக்கன் கல்லூரி சுவாரசியங்களை அண்ணனுக்கு சொல்ல அன்று எவ்வளவோ பேர்.
திலகர் மருது என் மிகப்பெரிய ரசிகன்.
என் கல்லூரி கால சாகசம் இப்படியெல்லாம் கூட என்பதை அருண்மொழி மரண நிகழ்வின் போது ட்ராட்ஸ்கி மருது சொல்லியிருக்கிறார்.
ராஜா சந்திரசேகர் என்னிடம் கேட்டார்.” காலேஜுக்கு குதிரையில வருவீங்களாமில்ல”
ப்ரகதிஷ் ரவிச்சந்திரன் என்னைப்பற்றி ட்ராட்ஸ்கி மருது ‘காலேஜுக்கு குதிரையில வருவான்’ என்று சொல்லும் போது தானும் அங்கே அப்போது இருந்ததாக தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன் மருதுவின்
தங்கை மகன் திருமணத்திற்கு போயிருந்த போது அங்கே கல்லூரி சீனியர் ஒருவர்
’ராஜநாயஹம் இளமை குறும்பு’ ஒன்றை எல்லோர் முன்னும்
போட்டு உடைத்து விட்டார்.
நான் கூட ட்ராட்ஸ்கியின் வித்தியாசமான திருமணப் பத்திரிக்கையை ரொம்ப வருடங்கள் பத்திரமாக வைத்திருந்தேன்.
அந்த கல்யாண பத்திரிக்கை
சிக்கனமான
இரண்டே வரியில்-
“எனக்கு திருமணம். தங்களை அன்போடு அழைக்கிறேன்.”
அண்ணன் ட்ராட்ஸ்கியின் அப்பா என் சினேகிதர் என்று நான் எப்போதும் பெருமிதத்தோடு சொல்வேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.