கல்லூரி தமிழில் பாடத்திட்டத்தில் தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி பாடமாக வைக்கப்பட்டிருந்தது. பின்னாளில் தி.ஜாவின் பரமரசிகனாக முத்திரை குத்தப்பட்ட நான் அப்போது ‘அக்பர் சாஸ்திரி’ சிறுகதைத் தொகுப்பை புரட்டிக் கூட பார்ககவில்லை
பி.ஏ., பட்டப்படிப்பு ஆங்கில இலக்கியம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாமாண்டிலேயே ஜெயகாந்தனின் ‘ஒரு பிடிச் சோறு’ துவங்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை அத்தனை நூல்களையும் படித்து முடித்து என் இயல்புபடி Revise செய்துவிட்டேன்.
English Fiction என்ற அளவில் James Hadleychase, Alistair Maclean, Denise Robins, Agathachristie என்று படித்துகொண்டிருந்தவன்
அப்போது தமிழில் மட்டும் ஜெயகாந்தனை முழுமையாக ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது முரண் நகையாகத் தோன்றுகிறது.
பி.ஏ. இரண்டாமாண்டு.
உடன் பிறந்த தம்பி அப்போது ‘பிரசாதம்’ என்ற புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான். ‘சுந்தர ராமசாமி’ என்று பெயர் போட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை அசுவாரசியமாகப் புரட்டினேன்.
முன்னுரையை வாசித்தேன்.
‘வாழ்வின் கதி நதியின் பிரவாகம். நம்முடைய திட்டம், தத்துவம், அனுமானம், ஹேஸ்யம், ஜோஸ்யம் இத்தனைக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு ஓடுகிறது. எனக்கு என் வாழ்க்கை என்றாலே என் அனுபவம் மட்டும் தானே. ஆக, இது தான் வாழ்க்கை என்று நான் ‘பிடித்து’ வைத்துக் கோடு கீச்சுகிற போதே நான் சற்றும் எதிர்பாராத விதமாய், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணமாய் இவ்வுலகம் புதுக்கோலம் கொண்டு இயங்குகிறதே. அது தான் வாழ்க்கையா?’ என்றெல்லாம் விரிந்த அந்த முன்னுரை செயலோயச் செய்துவிட்டது.
முதல் சிறுகதை ‘பிரசாதம்’ படித்தவுடனே உற்சாகம் ஏற்பட்டது. ‘சன்னல்’ கதையைப் படித்து முடித்தபோது பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. கிணற்றுத் தவளை. நம்பிக்கை உடைந்து விட்டது.
அப்புறம் மறு நாள் தான் ‘லவ்வு’ கதையைப் படித்தேன். கிடாரி, ஒன்றும் புரியவில்லை,வாழ்வும் வசந்தமும் ஆகிய கதைகள் என்னை ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டன. எல்லாக் கதைகளுமே ஸ்டாம்பு ஆல்பம், சீதை மார்க் சீயக்காய்த் தூள், மெய்+பொய்=மெய் எல்லாமே ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. எதுவுமே சோடையில்லை.
SERENDIPITIOUS HAPPY DISCOVERY ! யார் இந்த சுந்தர ராமசாமி? ஜெயகாந்தனின் அத்தனை நூல்களிலுமிருந்து மாறுபட்ட உயர்ந்த வாசிப்பு அனுபவத்தை ஒரு சிறுகதைத் தொகுப்பிலேயே தந்து விட்ட சுந்தர ராமசாமி. ஜெயகாந்தனிடம் காணக் கிடைக்காத LITERARY CLEVERNESS வேறு தூக்கலாக இவரிடம் தெரிகிறது. இப்போது நினைக்கிறேன்.
வாசகனாக TRANSFORMATION
சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ மூலமே கிடைத்தது.
......
மீள்பதிவு 2008
2005ல் சௌந்தர சுகன் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரையில் இருந்து.
22.02.2001ல் திருச்சி தமிழ் நாடு ஹோட்டலில் சுந்தர ராமசாமியிடம் பிரசாதம் செய்த மாயம் பற்றி சொன்ன போது இதை நீங்கள் எழுத வேண்டும் என்றார். ராஜநாயஹம் எழுத்தாளர்களுடனான அனுபவத்தை பதியச் சொன்னார்.
கடிதத்திலும் வலியுறுத்தினார்.
உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக எழுத வேண்டும் என்றார்.
சுந்தர ராமசாமி சொன்ன விஷயம் பற்றி பெரிய பிரமை எதுவும் இல்லை.
அந்த காலங்களில் இளைய வாசகர்களிடம், பலரிடம்
எப்போதுமே "எழுதுங்க" "எழுதுங்க" ன்னு சொல்வார்.
.
சுந்தர ராமசாமி "இறந்த காலம் பெற்ற உயிர்" நூலில் 'திண்ணைக்கு' கட்டுரையில் ராஜநாயஹம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த 'திண்ணைக்கு' கட்டுரை தான் சுந்தர ராமசாமி மீதான கடும் கசப்பு, கடுமையான பகைக்கான காரணமாக ஜெயமோகன் குறிப்பிட்டதுண்டு.
ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை' படித்து விட்டு உடனே சு.ரா எதிர் வினை
சுந்தர ராமசாமி : Dear R.P. Rajanayahem,
I am sorry to know that it was your turn this time to Receive Slanderous remarks.
I am being inflicted with peril and mental Agony 'For the past fifty years by this type of irresponsible remarks.