Share

Sep 26, 2009

பக்தி

பைபிளில் பரம பிதாவை நோக்கி

“O Lord, How long shall I cry
and You will not hear?”
Habakkuk 1: 2

தியாகப் பிரும்மம் காம்போஜி ராகத்தில் விம்முவது

"மறி மறி நின்னே மொரலிட நீ

மனஷுன தயராது "

'திரும்பத் திரும்ப நான் உன்னிடம்

முறையிட்டும் உன் மனதில் தயவு பிறக்கவில்லை '

(காம்போஜி ராக கீர்த்தனையை 'சிந்து பைரவி ' படத்தில் சாருமதி ராகத்தில் மாற்றிப்போட்டிருந்தார் இளையராஜா )

தியாகப் பிரும்மத்தின் சுப பந்துவராளி கீர்த்தனை -"என்னாள்ளு ஊரக்கே?" -' என்னுடைய கோரிக்கையை எப்போ கேட்கப்போறே ராமா ? ' என வினவும்.

"அன்று பாலகனாகி

ஆலிலை மேல் துயின்ற

எம் ஆதியாய் !

என்றும் உன்றனக்கு

எங்கள் மேல்

இரக்கம் எழாதது எம் பாவமே "

-ஆண்டாள் நாச்சியார் மொழி

பக்தி - External Meditationஎன்று தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள் .

பக்தி என்பதே ஒரு மனக்கோளாறு தான் என்று மனோதத்துவம் சொல்கிறது.

கடவுளை பண்ணையார் ஆகவும் பக்தனை அடிமையாகவும் உருவகப்படுத்தும் "பக்தி "


When one person suffers from delusion it is called insanity. When many people suffer from a delusion it is called religion.
- Robert M.Pirsig

...

"மண்ணைப் பிடித்தான் கடவுள்

மனிதனாயிற்று

ஆகி , அது என்ன

மூலக்ரத்தில்

உளிச்சத்தம் ?

கடவுளைப் பிடித்துக்கொண்டிருக்கிறது

மண் !"

_ பிரமிளின் கவிதை இது !

1 comment:

  1. HI RPR, I think this is one of your best blogs ! I'm a regular reader of your posts and I always get a feeling of some knowledge acquired after reading your words.
    Please continue your good work.

    Best regards,
    Dinesh.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.