tag:blogger.com,1999:blog-4662127972660221479.post849083001646348181..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: ரெட் கார்ப்பட் வெல்கம்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-34950526820203115202009-02-28T00:45:00.000+05:302009-02-28T00:45:00.000+05:30RP SirI saw this letter from Vanni on one of the w...RP Sir<BR/><BR/>I saw this letter from Vanni on one of the websites..heart wrenching...<BR/><BR/>வன்னியிலிருந்து வலியின் விழிம்பில் ஓர் கடிதம்.- "நலமுடன் இருக்கிறீர்களா? உலகத்தமிழர்களே!"<BR/>உங்களில் ஒருவன் (கண்கள் நிறையக் கனவுகளோடும், <BR/>துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த<BR/>ரணங்களின் வலியோடும்<BR/>அகதி முகாமில் வாடும்<BR/>புலம்பெயர்ந்த ஈழக்<BR/>குழந்தையின் கிழிந்து<BR/>போன சட்டைப்பைகளில்<BR/>இருந்த உடைந்த<BR/>பென்சிலின்<BR/>ஒட்டுத்துண்டில்<BR/>இந்தக்கடிதம்<BR/>எழுதப்படுகிறது)<BR/><BR/>நலமுடன்<BR/>இருக்கிறீர்களா? உலகத்<BR/>தமிழர்களே?<BR/><BR/>குண்டு விழாத<BR/>வீடுகளில்,<BR/>அமெரிக்காவுடனான<BR/>அணுகுண்டு<BR/>ஒப்பந்தத்தில்<BR/>கையெழுத்திடுவது<BR/>பற்றி அளவளாவிக்<BR/>கொண்டிருப்பீர்கள்,<BR/>இடைஞ்சலான நேரத்தில்<BR/>கடிதம் எழுதுகிறேனா?<BR/><BR/>எனக்குத் தெரியும்,<BR/>என் வீட்டுக் கூரையில்<BR/>விழுந்த<BR/>சிங்களவிமானத்தின்<BR/>குண்டுகள் என்னைப் போல<BR/>பல்லாயிரக்கணக்கான<BR/>தமிழ்க்குழந்தைகளை<BR/>அநாதை ஆக்கிய<BR/>போது, நீங்கள் எதாவது<BR/>நெடுந்தொடரின்<BR/>நாயகிக்காகக் கண்ணீர்<BR/>விட்டுக்<BR/>கரைந்திருப்பீர்கள்......<BR/><BR/>என் அம்மாவும்<BR/>அப்பாவும்<BR/>அரைகுறையாய் வெந்து<BR/>வீழ்ந்தபோது, உங்கள்<BR/>வீட்டு<BR/>வரவேற்ப்பறைகளில்<BR/>அரைகுறை ஆடைகளுடன்<BR/>அக்காமாரெல்லாம்<BR/>ஆடும் " மஸ்தானா,<BR/>மஸ்தானாவின்"<BR/>அரையிறுதிச் சுற்று<BR/>முடிவுக்கு<BR/>வந்திருக்கும்.<BR/><BR/>அண்ணனும், தம்பியும்<BR/>நன்றாகப்<BR/>படிக்கிறார்களா? அம்மா,<BR/>அப்பாவின்<BR/>மறைவுக்குப் பின்னால்,<BR/>எனக்குத் தலை<BR/>வாரிவிட்டு, பட்டம்மா<BR/>வீட்டில்<BR/>அவித்த இட்டலி<BR/>கொடுத்துப் பள்ளிக்கு<BR/>அனுப்பிய அண்ணனும்<BR/>இப்போது இல்லை,<BR/>நீண்ட தேடலுக்குப்<BR/>பின்னர் கிடைத்த அவன்<BR/>கால்களை மட்டும்<BR/>மாமாவும்,<BR/>சித்தப்பாவும்<BR/>வன்னிக் காடுகளில்<BR/>நல்லடக்கம்<BR/>செய்தார்கள்......<BR/><BR/>அப்போதே எழுத வேண்டும்<BR/>என்று ஆசைதான் எனக்கு,<BR/>நீங்கள் இலங்கை<BR/>கிரிக்கெட்<BR/>அணியின் இந்தியச்<BR/>சுற்றுப் பயணத்தை, இரவு<BR/>பகல் ஆட்டமாய்ப்<BR/>பார்த்திருந்தீர்கள்....அதனால்<BR/>தான் எழுதவில்லை.........<BR/><BR/>ஒலிம்பிக் தீபத்தின்<BR/>சுடர்களை உலகம்<BR/>முழுவதும், என்னைப்போல<BR/>ஒரு மலை<BR/>நாட்டு திபெத்<BR/>சிறுவனும், அவன்<BR/>இனத்துப்பெரியவரும்<BR/>சந்து பொந்தெல்லாம்<BR/>மறித்துத் தடுத்தபோது,<BR/>எனக்கு உங்கள் நினைவு<BR/>வந்தது.....அதுமட்டுமல்ல,<BR/>இந்திய அரசுகளின்<BR/>உதவியோடு, இலங்கை<BR/>ராணுவத்திற்கு நன்றி<BR/>சொல்லும்<BR/>திரைப்படச் சுருளின்<BR/>பிரதிகளும் நெஞ்சில்<BR/>நிழலாடியது.<BR/><BR/>ஒரு பக்கம், இரங்கற்பா<BR/>எழுதிக் கொண்டு,<BR/>மறுபக்கம், நவீன<BR/>ஆயுதங்களை<BR/>அனுப்பி வைக்கும்<BR/>உங்கள் கூட்டணித்<BR/>தலைவர்கள் எல்லாம்<BR/>நலமா தமிழர்களே?<BR/><BR/>இன்னொரு முறை<BR/>ஆயுதங்கள் அனுப்பும்<BR/>போது மறக்காமல் ஒரு<BR/>இரங்கற்பா<BR/>அனுப்புங்கள், சாவின்<BR/>மடியில் எங்களுக்கு<BR/>ஒரு<BR/>தமிழ்க்கவிதையாவது<BR/>கிடைக்கும் அல்லவா?<BR/><BR/>இன்னொரு தமிழகத்தின்<BR/>மறைவான இடத்தில்<BR/>நீங்கள் இலங்கை<BR/>ராணுவத்திற்கு<BR/>பயிற்சி அளிக்கும்<BR/>போது, குழந்தைகளையும்,<BR/>கர்ப்பிணிப்<BR/>பெண்களையும்<BR/>வலியின்றிக் கொல்வது<BR/>பற்றி ஒரு<BR/>வகுப்பெடுத்து<BR/>விடுங்கள். கொஞ்சம்<BR/>பாவமாவது<BR/>குறையட்டும்.......<BR/>மாஞ்சோலையில் ஒரு மாலை<BR/>நேரத்தின் மங்கலான<BR/>வெளிச்சத்தில்,<BR/>தம்பியின்<BR/>பிஞ்சு உடல்<BR/>நான்கைந்தாய்<BR/>சிதறடிக்கப்பட்ட அந்த<BR/>கோர நாளில் நாங்கள்<BR/>எல்லாம் கூட்டமாய்<BR/>அழுது கொண்டிருந்தோம்,<BR/><BR/>குழந்தைகள் இருக்கும்<BR/>பள்ளிக்கூடங்களை<BR/>தேடிக் கண்டு பிடித்து<BR/>கொலை<BR/>வெறியோடு உங்கள் "நேச<BR/>நாட்டு" விமானங்கள்<BR/>குண்டு மாரி பொழிந்த<BR/>போது<BR/>நீங்கள் இந்திய<BR/>விடுதலையின் பொன்<BR/>விழாக்<BR/>கொண்டாட்டங்களுக்கான<BR/>குறுஞ்செய்தி<BR/>வாழ்த்துக்களில்<BR/>களித்திருந்தீர்கள்,<BR/>உலகத்<BR/>தொலைக்காட்சிகளின்<BR/>நீங்கள் பார்த்து<BR/>மகிழும் முதன் முறைத்<BR/>திரைப்படங்கள்<BR/>தடை படுமே என்று தான்<BR/>அப்போது எழுதவில்லை,<BR/><BR/>எங்கள் இனப் போராளிகளை<BR/>கொன்று குவித்து,<BR/>நிர்வாணமாக்கி, இறந்த<BR/>உடலுக்குக்<BR/>கொடுக்கின்ற இறுதி<BR/>மரியாதை இல்லாமல், எம்<BR/>இறப்பை எள்ளி நகையாடிய<BR/>உங்கள் "<BR/>சார்க்"<BR/>கூட்டாளியின் கொடிய<BR/>முகம் கண்ட போதே எழுதி<BR/>இருக்க வேண்டும்.<BR/><BR/>அப்போது நீங்கள் கட்சி<BR/>மாநாடுகளில் கவனமாய்<BR/>இருந்தீர்கள்,<BR/>பெண்களின்<BR/>இடுப்பில் பம்பரம்<BR/>விட்ட களைப்பில் கட்சி<BR/>துவக்கிய<BR/>கேப்டன்களின்<BR/>பின்னால்<BR/>அணிவகுத்து<BR/>நின்றீர்கள், நீங்கள்<BR/>போட்ட வாழ்க<BR/>கோஷங்களின்<BR/>இரைச்சலில்<BR/>எங்கள் நிஜக்<BR/>கேப்டன்களின்<BR/>வீரமரணம் கேள்விக்<BR/>குறியாய்க் கலைந்து<BR/>போனது,<BR/>தமிழர்களே?அப்பாவின்<BR/>வயிற்றை அணைத்துக்<BR/>கொண்டு, செப்பயான்<BR/>குளத்தில்<BR/>முங்கி எழுந்த<BR/>நினைவுகளை மனதில்<BR/>சுமந்து கொண்டு, வாரம்<BR/>இரண்டு முறை<BR/>அடிகுழாயில் அடித்து,<BR/>அடித்து கொஞ்சமாய்<BR/>ஒழுகும் தண்ணீர்<BR/>நின்று<BR/>போவதற்குள் ஓடி வந்து<BR/>குளித்து விடுகிறேன்<BR/>அகதி முகாமில்.<BR/><BR/>முகாமின், தகரத்<BR/>தடுப்புகளின்<BR/>இடைவெளியில் தெரியும்<BR/>பள்ளிக்கூடமும்,<BR/>அதிலிருந்து வரும்<BR/>மதிய உணவின் வாசமும்,<BR/>அம்மாவின் மடியில்<BR/>இருந்து,<BR/>எப்போதும் கிடைக்கும்<BR/>அன்பையும் எண் பழைய<BR/>வாழ்வையும் நினைவு<BR/>படுத்தும்.<BR/>ஆயினும் பாழும் வயிறு,<BR/>பசி கலந்த வலி கொடுத்து<BR/>பாய்ந்து ஓடி<BR/>வரிசையில்<BR/>நிறுத்தி விடும்,<BR/>அளந்து<BR/>கொடுக்கப்படும்<BR/>அவமானச்<BR/>சோற்றுக்காய்.......<BR/><BR/>அப்போதெல்லாம் எழுதத்<BR/>தோன்றும் எனக்கு, ஆனால்<BR/>நீங்கள் பீஸாக்<BR/>கடைகளின்,<BR/>வட்ட மேசைகளில்<BR/>அமர்ந்து ஆங்கிலம்<BR/>பேசிக்<BR/>கொண்டிருந்தீர்கள்,<BR/>எழுதத்<BR/>தோன்றவில்லை.....எனக்கு....<BR/><BR/>அமைதியாய் விடியும்<BR/>பொழுதும்,<BR/>அழகாய்க் கூவும்<BR/>குயிலும்,<BR/>தோகை விரிக்கும்<BR/>மயிலும்,<BR/>காதல் பேசும்<BR/>கண்களும்,<BR/>தாத்தா பிடித்த<BR/>மீன்களில் அம்மா வைத்த<BR/>குழம்பும்,<BR/>தாமரை மலரின் தாள்கள்<BR/>பறிக்க நாங்கள்<BR/>குதித்த குளங்களும்,<BR/>பக்கத்து வீட்டுப்<BR/>பாண்டி அண்ணன் வேடு<BR/>கட்டக் குவித்து வைத்த<BR/>மணலும்,<BR/>அதில் சங்கு பொறுக்கி<BR/>விளையாடிய என்<BR/>தம்பியின் கால்<BR/>தடங்களும்,<BR/>கருவேலன் காடுகளில்<BR/>பொன் வண்டு பிடித்த என்<BR/>பழைய நினைவுகளும்,<BR/><BR/>இனிமேல் எனக்குக்<BR/>கிடைக்கவே கிடைக்காதா<BR/>உலகத் தமிழர்களே?<BR/><BR/>எல்லோரும் சேர்ந்து<BR/>மூட ஞானிக்கு எழுதிய<BR/>நீண்ட கடிதமெல்லாம்<BR/>வேண்டாம்<BR/>அண்ணா, என்<BR/>கேள்விகளில் எதாவது<BR/>ஒன்றுக்கு, உங்கள்<BR/>வீட்டில் கிழித்து<BR/>எறியப்படும்<BR/>நாட்காட்டித்<BR/>தாள்களின்<BR/>பின்புறமாவது பதில்<BR/>எழுதுங்கள்,<BR/>உலகத் தமிழர்களே........<BR/><BR/>ஏனெனில் நீங்கள்<BR/>எழுதப் போகும் பதிலில்<BR/>தான் ஒரு இருண்டு போன<BR/>இனத்தின்<BR/>விடுதலையும், துவண்டு<BR/>போன அகதிகளின்<BR/>வாழ்க்கையின்<BR/>மறுபிறப்பும்<BR/>இருக்கிறது.<BR/><BR/>வலி கலந்த<BR/>நம்பிக்கைகளுடன்,<BR/>உங்கள் தொப்புள்கொடி<BR/>உறவு,<BR/>தமிழீழத்திலிருந்து! <BR/><BR/>முடிந்தால் உங்கள் ஊர் பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் இக்கடிதத்தை அறியத்தாருங்கள்! <BR/><BR/><BR/>Regards<BR/>KannanAnonymousnoreply@blogger.com