Share

Nov 30, 2016

முதலில் ‘ நடை’ அப்புறம் ’கசடதபற’


மனுஷ்யபுத்திரன் ’விகடன் தடம்’ அக்டோபர் இதழில்  "கவிதை பற்றிய பார்வைகள்" கட்டுரையில் ‘1970களில் வெளி வந்த ‘கசடதபற’ இதழ் நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதன் வழியே உருவாகி வந்த கவிஞர்களில் முதன்மையானவர் ஞானக்கூத்தன்.’ என்று எழுதியிருப்பதால் ஒன்றை சுட்டிக்காட்டுகிறேன்.

எழுத்து பத்திரிக்கையில் பிரசுர வாய்ப்புக்காக ஞானக்கூத்தன் ஐந்து கவிதைகளை சி.சு.செல்லப்பாவிடம் கொடுத்திருந்தார். கவிதைகள் பிரசுரிக்கப்படவேயில்லை. கவிதைகளில் இலக்கணம் இருக்கிறதாக சி.சு.செல்லப்பாவின் அபிப்ராயம்.

சி.மணி, ந.முத்துசாமி முயற்சியில் ’நடை’ பத்திரிக்கை கோ.கிருஷ்ணசாமியை ஆசிரியராகக் கொண்டு 1968ல் துவக்கப்பட்டது.

சி.சு.செல்லப்பாவிடம் இருந்த ஞானக்கூத்தனின் ஐந்து கவிதைகளை ந.முத்துசாமி போய் வாங்கி வந்தார். 
மீட்கப்பட்ட(!) அந்த ஐந்து கவிதைகளும் ’நடை’ முதல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதனால் நவீன தமிழ் இலக்கிய உலகில் ஞானக்கூத்தனுக்கு பிள்ளையார் சுழி.

அதன் பிறகு தான் 1970ல் ’கசடதபற’ பத்திரிக்கையில் ஞானக்கூத்தன் கவிதைகள் பிரசுரமாயின.
’நடை’ தான் கசடதபற இதழுக்கு முன்னரே நவீன கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. ’நடை’ மூலம் ஞானக்கூத்தன் உருவாகி வந்தார். கசடதபற பங்களிப்பை மறுக்கவில்லை.
..........................
ஒரு நல்ல ஜோக்

பேராசிரியர் செ. ரவீந்திரன் ஆரம்ப காலத்தில் தன் பெயரை ’இரவீந்திரன்’ என்று தான் எழுதி வந்துள்ளார்.
’இ’ரவீந்திரன்.
ஒரு அமெரிக்க பெண் தமிழ் கற்றுக்கொள்ள மதுரை யுனிவர்சிட்டிக்கு வந்தவள்
இவர் பெயரை ” இரவு இந்திரன்” என்று உச்சரித்திருக்கிறாள்! அப்புறம் தான் தன் பெயரில் உள்ள ’இ’ யை ’நீக்கல்’ செய்து விட்டார்.

Nov 28, 2016

சார்பு


சார்ந்திருக்க எவ்வளவோ இருக்கிறது.
”எதையேனும் சார்ந்திரு
கலை, இலக்கியம், சங்கீதம்,இங்கிதம்
 இப்படி எதையேனும் சார்ந்திரு.
இல்லையேல் வாழ்க்கை காணாமல் போய் விடும்.”
- வண்ண நிலவன்
‘ மெய்ப்பொருள்’ கவிதைத்தொகுப்பில் ஒரு கவிதை.’

ஊட்டி தளையசிங்கம் கருத்தரங்கம் நிகழ்விற்காக சென்றிருந்த போது தனிப்பட்ட உரையாடல் போது வெங்கட் சுவாமிநாதனிடன் நான் கேட்டேன். “ ஒரு இலக்கியவாதி பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியுமா?”
உடனே அவர் பதில்: ”ஏன், ஒரு இலக்கியவாதி மார்க்ஸிஸ்ட் ஆக இருக்க முடியும் என்றால் ஏன் பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியாது? ஏன் இருக்கக்கூடாது?”
மௌனியின் பூணூலைப்பார்த்து அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ.ரா “ இந்த சனியனை கழட்டி அந்த ஆணியிலே மாட்டு” என்று சொன்ன போது மௌனி சற்றும் யோசிக்காமல் சொன்னார் “Rather I would cut my cocks and put it there!”
நான் பெரிதும் மதிக்கும் ந. முத்துசாமியிடம் இந்த கேள்வி ’உங்களுக்கு பிடித்த கொள்கை என்ன?’ கேட்கப்பட்டால் எப்போதும் தயங்காமல் உடனே சொல்வார் “ திராவிட இயக்கக் கொள்கைகள்”
முத்துசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் மௌனி!
அசோகமித்திரன் பி.ஜே.பி சார்புடையவர்.
லா.ச.ரா. ஆச்சாரம் எல்லோரும் அறிந்தது.
தி.ஜானகிராமன் ஆன்மீக தேடல் கொண்டிருந்தவர்.

 கி.ரா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருக்கிறார்.
பெரும்பாலான படைப்பாளிகள் மார்க்ஸீயத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவர்கள். மனிதன் மீதான அக்கறை தான் மார்க்ஸீயம் என்பதால் அதை எங்கனம் அலட்சியப்படுத்த முடியும். முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரும் மார்க்ஸீயத்தின் பால் அபிமானம் கொண்டவர்கள்.
நான் கல்லூரி வாழ்க்கையின் போது தி.மு.க. காரன். திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இரண்டிலும் உறுப்பினராய் இருந்தவன்.உறுப்பினர் கார்டுகள் பத்திரமாக என்னிடம் ரொம்ப காலம் இருந்ததுண்டு. அந்த நேர என் அரசியல் ஈடுபாடுகள் பற்றிய சாட்சிகளாக!
எப்போதுமே அ.தி.மு.க வுக்கு ஓட்டு போட்டதேயில்லை.
என் மார்க்சீய அபிமானம் காரணமாக 'தோழர் ' என்றபட்ட பெயரும் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது.இன்றும் என்னை என் பெயரை சொல்லாமல் ' தோழர் ' என்று குறிப்பிட்டு அழைக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு.
சேலம் காம்ரேடுகளோடு மோதல் ஏற்பட்ட போது ஒரு பத்திரிகையில் எழுதிய எதிர்வினைக்கு ”கொள்கை சனாதனத்தின் மிச்ச சொச்சங்கள்”தலைப்பை கொடுத்தேன்.
சுந்தர ராமசாமி சொன்னதை அடையாளத்தை நிராகரிக்கும் நானும் சொல்வேன்.
' இலக்கியவாதியாகிய நான் ஒரு மொழிக்கோ, சாதிக்கோ,மதத்திற்கோ இனத்திற்கோ, கட்சிக்கோ, சித்தாந்ததிற்கோ,ஏன் நாட்டிற்கோ கூட விசுவாசமாக இருக்க முடியாது '



.........................................................

Nov 23, 2016

பாலமுரளி கிருஷ்ணா


பாலமுரளி கிருஷ்ணாவின் சங்கீத கச்சேரிகளில் யாராவது “ ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா” பாடல் பாடச்சொல்லி சீட்டு கொடுத்தால் அவருக்கு கோபம் வந்து விடும். 

தன் வாழ் நாளில் இருபத்தைந்தாயிரம் கச்சேரி பாடியிருப்பார். சினிமாப்பாடல் பாடச்சொல்லி கேட்டால் எரிச்சலாகி விடுவார்.
இந்தக்குணம் கர்னாடக சங்கீத கச்சேரி செய்யும் போது ஜேசுதாஸிடமும் கூட உண்டு. “ இவ்வளவு சங்கீத ரசிகர்கள் இருக்கிற இடத்தில சில விசிலடிச்சான் குஞ்சுகள் வந்து அபத்தமா சினிமா பாட்டு பாடச்சொல்றான்” என்று பகீரங்கமாக கண்டிப்பார்.
பாலமுரளிக்கு என்று ஒரு மனோதர்மம் உண்டு. கர்னாடக சங்கீத கீர்த்தனைகளைக்கூட அவர் விருப்பப்படி தான் தேர்வு செய்து பாடுவார்.
“ இந்த கீர்த்தனை, அந்த கீர்த்தனை” என்று சீட்டு வருவதை விரும்பவே மாட்டார். தன் தேர்வில் தான் கீர்த்தனைகளை வழங்குவார்.
“ Lend thy ears! This is BalaMurali Music! Don’t ask for this and that.”

Child Prodigy! இப்படி இருப்பதில் பல மனச்சிக்கல்கள்,அவஸ்தைகள் உண்டு. மாலி, மாண்டலின் ஸ்ரீனிவாசன் போன்றவர்களும் இப்படிப்பட்டவர்கள்.
பாலமுரளியின் இரண்டாவது மனைவி பல ஆண்டுகளுக்கு முன் அவர் பற்றி தன் மனக்குறைகளை  வாரப்பத்திரிக்கையொன்றில் பேசினார்.


பாலமுரளி கிருஷ்ணா சங்கீத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். சங்கீத ஆராய்ச்சியில் ஈடுபட்டதால் அவர் பாடும் கீர்த்தனைகள் சாஸ்த்ரோக்தமாக இருக்காது. தன் இஷ்டத்துக்குப் பாடுகிறாரே என்று எவ்வளவோ ரசிகர்கள், சங்கீத விற்பன்னர்கள் முகம் சுழித்திருக்கிறார்கள். ’ஆராய்ச்சியில் ஈடுபட்டவனெல்லாம் வீணாய்த்தான் போனான்’ என்று கடுமை காட்டியவரகள் உண்டு.

மதுரை மணி அய்யர், எம்.டி.ராமனாதன், அருணா சாய்ராம் ரசிகர்களுக்கு பாலமுரளியையும், மஹாராஜபுரம் சந்தானத்தையும் பிடிக்காமல் போனது இதனால் தான்.
…………………………………………………………………………..
Aug 24, 2012
பாலமுரளியின் திரை இசைப் பாடல்கள்
பின்னனிப் பாடகி பி.சுசிலா விழா. சிலமாதங்களுக்கு முன் நடந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
பாலமுரளி கிருஷ்ணா சுசிலாவுடன் இனணந்து “தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது நேரினிலே, மரகத தோரணம் அசைந்தாட, நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட பாட”
பாலமுரளி கிருஷ்ணா அனாயசமாக அதிக சிரமப்படாமல் பாடினார்.
”மாங்கனி கன்னத்தில் தேனூற
இருமைவிழி கிண்ணத்தில் மீனாட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் மேனி தள்ளாட ஆட
தங்கரதம் வந்தது வீதியிலே”
அதே சமயம் சுசிலாவும், சௌந்தர் ராஜனும் பி.பி.ஸ்ரீனிவாஸ் மூவரும் பாடியபோது முதுமை காரணமாக ரொம்ப சிரமப்பட்டு பாடினார்கள். அது ஒரு குறையாகத்தெரியவில்லை. குழந்தையின் மழலை போல யாழைவிட குழலைவிடவும் ரசிக்கத்தக்கதாய் நெகிழ்த்தியது.
சுசிலா,டி.எம்.எஸ் இருவரும் பாடிய ’ நான் மலரோடு தனியாக “ பாடலில் டி.எம்.எஸ் ”என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்” என்று தளர்ந்து போன நடுங்கும் குரலில், ஓடுவது போன்ற பாவனையுடன் பாடியது ரசிக்கத்தக்கதாக இருந்தது.
முதியவர் தான் என்றாலும் கூட பாலமுரளி மட்டும் இயல்பாக நன்றாக பாடினார்.
பாலமுரளி கிருஷ்ணா கர்நாடக சங்கீத பாடகர் என்பதால் தான் அந்த விசேசப்பயிற்சி அவரால் இந்த ’தங்கரதம் வந்தது’ஆபோகி ராகப்பாடலை இந்த வயதிலும் நன்றாக பாட முடிந்திருக்கிறது.ஸ்ரீதரின் ‘கலைக்கோயில்’ படத்தில் இடம்பெற்றப்பாடல்.
பாலமுரளி சினிமாவுக்காகப் பாடிய பாடல்களில் மிகப்பிரபலமான திருவிளையாடல் பட “ ஓரு நாள் போதுமா,இன்றொரு நாள் போதுமா” பாடல் காட்சியில் டி.எஸ்.பாலைய்யாவின் நடிப்பு அந்தப் பாடல் மிகப் பிரபலமாக காரணம்.
’சாது மிரண்டால்’ படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்காக அவர் பாடிய பாடல்
“ அருள்வாயே நீ அருள்வாயே திருவாய் மலர்ந்து அருள்வாயே”
”சுபதினம்” என்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் முத்துராமனுக்கும் புஷ்பலதாவுக்கும் ஒரு பாடல். ரொம்ப நல்ல டூயட் பாடல். பாலமுரளி -சுசிலா பாடியது.
”புத்தம்புது மேனி இசைத்தேனி தூங்கும் மலர் மஞ்சமோ”
”கண்மலர்’’ (கிருஷ்ணன்) பஞ்சு வின் தம்பி ’பட்டு’ இயக்கிய படம். ஜெமினி,சரோஜாதேவி,சௌகார் ஜானகி, நாகையா நடித்திருந்தார்கள்
இந்தப் படத்தில் “ பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க வாழ் நாள் நடந்ததையா நடராஜா” என்ற எஸ்.ஜானகி பாடலுக்கு ஒரு தொகையறா பாலமுரளி பாடியிருந்தார் கேதார் கௌளை ராகத்தில். படத்தில் வி.நாகையா பாடுவதாக.
”அம்பலத்து நடராஜா
உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தைத் தேர்ந்தெடுத்ததேனையா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டினிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனய்யா”
”கவிக்குயில்” படத்தில் ரீதிகௌளை ராகத்தில் பாலமுரளியின்
“ சின்னக்கண்ணன் அழைக்கிறான் ராதையை,பூங்கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக்கண்ணன்அழைக்கிறான்”
.........................................................................

Nov 22, 2016

The way to hell


சம கால நடப்புகள் பற்றிய கடும் அதிர்ச்சியோ, அதீத பரவசமோ எனக்கு எப்போதுமே கிடையாது. முடிந்தவரை எல்லோருமே விவாதிக்கும் விஷயங்களை நான் தொட விரும்பியதில்லை.

இந்த Demonitisation என் சொந்த வாழ்க்கையில் பெருந்துயரம் ஏற்படுத்தி விடப்போவதில்லை என்று ஒரு அயர்ச்சி முதலில் இருந்தது.எப்போதுமே கைக்கும் வாய்க்குமாக செலவுக்கு அல்லாடும் வாழ்க்கையில் இது என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும். Living hand to mouth.

கறுப்பு பணம் ஒழிய வேண்டும் என்பதில் பெரிய மேல்மூடிகளையும், முதலைகளையும், கறுப்புக்குல்லாக்களையும் தவிர மற்றவர்களுக்கு அபிப்ராய பேதம் இருக்கமுடியுமா? Black money is the elephant in the room. A gorilla in the room.
ஆனால் நவம்பர் எட்டாம் தேதி சமூக வாழ்வை முற்றிலுமாக புரட்டிப்போட்டிருக்கிறதே. Common man is a lameduck to day.
"The road to hell is paved with good intentions” இதை சொன்னவர் சாமுவேல் ஜான்சனா?, ஜான் ரே? அல்லது செயின்ட் பெர்னார்ட்? ஜான்சனுக்கு முன்னரே ஜான் ரேயும் செயின்ட் பெர்னார்டும் சொல்லி விட்டார்களாம்.
தாஸ்மாக்கிலும், போக்குவரத்துக்கழகங்களிலும் அன்றாடம் சேர்கிற நூறு, ஐம்பதெல்லாம் பேங்க் போகும்போது பழைய 500,1000 ரூபாய் நோட்டாகி விடுகிற மேஜிக்!
‘Outlook’ மேகசினில் இந்த வாரத்தில் கவர் ஸ்டோரி India struggles with an unplanned transition towards a cashless future என்று மிரட்டுகிறது.
Shock therapyயில் அரிந்தம் முகர்ஜி குறிப்பிடுகிற விஷயம் ஒன்று.
“ 14 லட்சம் கோடி பணம் இந்தியாவில் புழக்கத்தில் இருந்திருக்கிறது. இதில் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 84 சதவீதம். மீதி 16 சதவீத நோட்டுக்கள் தான் 100,50,20,10. இப்போது மொத்த பண பரிவர்த்தனை பளுவும் இந்த 16 சத வீத நோட்டுக்கள் மீது. புதிதாய் வெளி வந்திருக்கிற 2000 ரூபாய் நோட்டுக்களுக்கு சில்லரைக்கு திண்டாட்டம் ஏன் ஏற்படாது?”

மோடி மஸ்தான் நடவடிக்கை எல்லோரையும் தெருவில் நிறுத்தி விட்டது. இவ்வளவு கோடி மக்கள் உள்ள நாட்டில் 84 சதவீத புழக்கத்தில் உள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதென்று அறிவிப்பதற்கு முன் புதிய ஐநூறு நோட்டுக்களை எந்த அளவிற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்?
அடித்தட்டு மக்கள் வாழ்வின் சரிவுகளை எப்படி சரி செய்யப்போகிறாய்?
கால் முட்டாப்பயல் கூட இப்படி கூறுகெட்டு இருக்க முடியுமா?
An unplanned transition towards a cashless future.
....................................................................................

Polemics


அன்று தேதி 22.02.2002
சுந்தர ராமசாமி திருச்சி பேருந்து நிலையம் அருகில் ’ஹோட்டல் தமிழ்நாடு’ அறையொன்றில் தங்கியிருந்தார்.

நான் அவரை பார்க்கப் போயிருந்தேன்.
அன்று சுராவுடன் திருச்சிக்கு கூடவே ஒருவர் வந்திருந்தார். சற்றும் சம்பந்தமேயில்லாமல், இலக்கியம் பற்றி ஏதுமே அறியாதவராக. சு.ராவிற்கும் அந்த பெரியவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் தொடர்பு படுத்திப்பார்க்க முடியாமல் naïve ஆக ரொம்ப சாதாரண கிராமத்து பாமரன் போல.
வ.உ.சி வீட்டிற்கு ஒரு நாள் இரவு வந்து தங்கிய பாரதி தன்னுடன் பண்டாரத் தோற்றமுள்ள ஒரு நபரை அழைத்து வந்திருந்தாராம். பாரதியின் ஆளுமைக்கு சம்பந்தமேயில்லாத மந்தமும் மட்டியுமான ஒரு மனிதர். ‘பாரதிக்கு இப்படி ஒரு சகா!’ என்று ஆச்சரியப்பட்டாராம் வ.உ.சி. எனக்கு இந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது!
நானும் சுராவும் கஸ்டம்ஸ் ஆஃபிஸுக்கு போய் விமலாதித்த மாமல்லனை தேடினோம். அவர் வீட்டில் இருந்தார். உடனே கிளம்பி ஹோட்டலுக்கு வருவதாக சொன்னதால் திரும்பி வந்தோம்.

விமலாதித்த மாமல்லன் ஹோட்டலுக்கு வந்தார்.
நான் சமீபத்தில் அசோகமித்திரன் டி.வி பேட்டி ஒன்றில் பேசியதை அப்படியே அவர் பேசிகிற மாதிரியே சொன்னேன்.
டி.வியில் அசோகமித்திரனிடம் ஒரு கேள்வி : உங்களுக்குப் பின்னே வந்த எழுத்தாளர்களில் உங்களுக்கு பிடித்தவர்கள் பற்றி சொல்லுங்கள்.

அசோகமித்திரன்: “நிறைய பேரு வந்திருக்கா… நன்னாவே எழுதுறா..ரொம்ப நன்னா எழுதிண்டிருக்கா.. வண்ண நிலவன்னு ஒருத்தர்.. (சற்று யோசித்து) ஆ…. விமலாதித்த மாமல்லன்!”
சுந்தர ராமசாமி நல்ல ரசிகர். உடனே Once more!
“ராஜநாயஹம்! அசோகமித்திரன் மாதிரி இன்னொரு முறை நடித்துக்காட்டுங்கள்.”
வெங்கட் சாமிநாதன் வசனம் எழுதி ஜான் ஆப்ரகாம் இயக்கிய ’அக்ரஹாரத்தில் கழுதை’ படம் ராபர்ட் ப்ரஸ்ஸான் இயக்கிய ’பல்தஸார்’ படத்தின் தழுவல் என்று விமலாதித்த மாமல்லன் சொன்னார். அப்போது நான் பல்தஸார் பார்த்திருக்கவில்லை.
சுராவைப்பார்க்க கொஞ்ச நேரத்தில் இமையம் குடும்பத்துடன் வந்தார். சுராவுக்கு அன்பளிப்பாக பேனா போல சில கொடுத்தார்.
அப்புறம் மனுஷ்யபுத்திரனும் அவருடைய கஸின் சல்மாவும் வந்தார்கள்.
……………………………………….

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் திடீரென்று விமலாதித்த மாமல்லன் ’செல்’ பேசினார். மாமல்லன் அப்போது சொன்ன விஷயம் எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
நான் மாலனை பிராமணர் என்றே முப்பது வருடமாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். மாலனுக்கும் எனக்கும் உ.வே.சுவாமிநாதய்யர் பெயர் சம்பந்தமாக நடந்த ஒரு இலக்கிய சர்ச்சையில் கூட நான் அவரை ஒரு பிராமணராக அடையாளமிட்டே எழுதியிருந்தேன். இந்த சர்ச்சையில் பிராமணர் என்று அடையாளமிட்ட போது மாலன் அதை மறுக்கவில்லை. பொ.வேலுச்சாமி எழுதிய ஒரு காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து எழுந்த சர்ச்சை.
2005ம் வருடம்.அப்போது எனக்கு தமிழ் டைப்பிங் செய்யத்தெரியாது. ஆங்கிலத்திலேயே என் விவாதத்தை செய்திருந்தேன்.
பதிவுகள்.காமில் கூட வெளியாகியிருந்தது

அந்த சர்ச்சை விவகாரம் படித்து விட்டு தான் மாமல்லன் எனக்கு போன் போட்டு மாலன் பிராமணர் அல்ல என்றார். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. மாமல்லன் சொல்கிறார் என்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. தரவுகள் விஷயத்தில் மிகுந்த கவனமாயிருப்பவர்.
அப்போது எவிடென்ஸ் கதிர் எழுதிய பதிவில் மாலன் பிராமணர் அல்ல என்று மாமல்லன் முதலில் குறிப்பிட்டிருந்திறார். பின்னர் அது தவறு என்று தெரிந்தவுடன் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இந்த எவிடென்ஸ் கதிர் விஷயம் எனக்கு தெரியாது.
அவரிடம் மாலன் பிராமணர் தான் என்பதை மாமல்லன் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியவே தெரியாது.
தகவல் பிழை என் எழுத்தில் வரக்கூடாது என்பதில் உறுதியாயிருப்பவன் நான்.
Even Homer sometimes nods.
நேற்று இரவு மாமல்லன் எனக்கு போன் செய்து மாலன் பிராமணர் தான் என்பதை உறுதிப்படுத்தினார்
2005ம் ஆண்டு மாலன் ப்ளாக்கில் என் விவாதம் கீழே. பதிவுகள்.காமில் கடைசி பகுதி எடிட் செய்யப்பட்டிருந்தது.
பதிவுகள்.காம் லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன்.


A Riposte From R.P.RAJANAYAHEM to Maalan:

1. Po. velsamy should take responsibility to give a reply to this. Kalachuvadu has definitely no motive in it. Maalan is biased in depicting a funny motive. Maalan's assumption is peculiar.
Po. Veluchamy was in "Nirapirigai" coterie and he has no rapport with Kalachuvudu.
2. This was the first article he wrote in Kalachuvadu.
3. He is an unique and important scholor
4. He has his own individuality and he has no need to blow the pipe of Kalachuvadu at any cost.
5. You have pointed out a factual error and thus you have done a good work. Thanks a lot. But why should you try to fix this as a polemics and establish a strange motive on Kalachuvadu.
6. Po.veluchamy has clearly indicated in his article that swaminathaiyer was a sanadhani and inspite of that his contribution to Tamil longuage is great and one cannot ignore his sacrifice and hard work.
7. Should Maalan have a motive to every news of SUN TV for eg If a R.S.S member' s speach had been telecasted, could one say easily that Because Maalan is a brahmin , he has a motive in editing this new. wont this be funny?
8. It leads to a suspicion that For his obvious rapport with DMK leader M.Karunanidhi , Maalan is trying his level best to avoid his brahmin identity by accusing Kalachuvadu as Pro Bramin.
9. Swaminathaiyer in his Enn Saritram clearly writes in 'Peyar matram' chapter that he couldn't easily be accustomed to this name ' Swaminathan'. It is more than obvious because of his saiva principle Meenakshi sundaram forced him to change his student's name from Venkata raman to his another name Swaminathan.
I have a right to question that you try to establish that Po veluchamy has no sense of his own and he stoops to any level as he is a sutra that he agrees to write to a brahmin's command and thus this he has glorified brahmins in his article . this is Maalan's accusation. So a sutra can never raise to a level of great scholar and he can be easily dominated by brahminism. Maalan has strongly established this rotten motive in his article.
Please Maalan, You cannot take a scholar like Veluchamy for granted as he is a sutra by birth.
Friday, Jul 22, 2005
Dear Maalan, My intentions are genuine. I don’t see the need to retaliate. I object your comment that I am drifting matter from the real issue. It is again funny that you are emphasizing that you have never criticized Po.Veluchamy. We all know your target is Kalachuvadu and your deliberate intention is to attack Kalachuvadu is also clearly depicted in your article. When you raise a question to Kalachuvadu for the article written by Veluchamy, it is more than obvious you put a finger on Veluchamy also. You have found a factual error in Po.Veluchamy article only.
I have to use the same weapon on you unwillingly by which you tried to attack Kalachuvadu. You only forced me to question in your style and method.
I have given a proper rejoinder to your article and I feel this is more than enough.
…………………………………………….

R.P.RAJANAYAHEM: AN ARDENT FAN OF KARUNANIDHI SO FAR IS LAUGHING AT ME

It is the height of irony that an ardent fan of Karunanidhi so far is amused in laughing at me and brands me as a rasika of Kalachuvadu!( I mark it as ‘SO FAR’ as it is whispered,there is a rumour now that Maalan is relieved from his post in SUN TV)
“ I do agree Kalachuvadu cannot interfere with Veluswamy’s Ideas and Ideology.. Maalan need not have attributed motives to Kalachuvadu.”
The above declaration of Indira Parthasarathy Proves strongly that my stand is correct. What I have specified in my rejoinders, Parthasarathy also has stressed in his mail and thus Maalan’s motive and Strange assumption is Totally shattered into pieces and yet Maalan has started his second round to play his tricks .
I have already thanked Maalan that he has found a factual error. PO. Veluchamy has admitted honestly that he has committed an error when I spoke with him over phone two days back.. But he is extremely pained and wounded at Maalan’s writings ‘ Researchers misinterpret the historical truths according to their own will and Kalachuvadu’s hand in his own writings.' Indira Parthasarathy is now informed of Veluchamy’s admittance of committing a factual error in a reply given by me to his email Yesterday.
Maalan is doing much ado about nothing and making a big issue over a small tissue now. He has no room to hide himself and of course he is in a pathetic condition and this grief should be crowned with consolation and only the tears live in an onion should water this sorrow.
It is a farce that Maalan had earlier ignored me by declaring "I will not respond to you hereafter as you have a closed mind to appreciate the issue" and now he conveniently forgets his declaration and again teases me as a Kalachuvadu Rasika (even after my explanation that Kalachuvadu is not an untouchable god) and gives me importance in his second round article's Title!
This itself is a success to my honest stand!!
Sundara Ramaswamy is being afflicted by this kind of slanderous remarks for the past fifty years. Actually he refused to respond more than sixty criticisms on 'JJ SILA KURIPPUKAL' and he will never respond to you as he knows very well that whatever genuine reply can never satisfy the intellecuals stuffed with strange criterion measure and funny reason.
.....................................................................................

Nov 18, 2016

ஈயடிச்சான் காப்பி - அறிவுத்திருட்டு



http://rprajanayahem.blogspot.in/2013/02/blog-post_12.html
மேற்கண்டஎன்னுடைய ஜெமினி பதிவைத் திருடி
இங்கே ஃபேஸ்புக்கில் ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் என்கிற ஆள் தன் பதிவாக நேற்று போட்டிருக்கிறார். கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்திற்கு  பாராட்டு மழை வேறு.
வேதனையாய் இருக்கிறது.
இதை கண்டிக்க வேண்டும். கீழே இருப்பது திருட்டுப்பதிவு
https://www.facebook.com/JeyaRam20…/posts/10207568474829880…

சாயம் வெளுத்த பின், காப்பியடித்த ஆளின் கிறுக்குத்தனமான பதில் :பதிவை நீக்கும் எண்னமோ, மன்னிப்பு கேட்கும் எண்னமோ எப்போதுமே கிடையாது. கூகுள் சர்ச்சில் இருந்த சில நல்ல விஷயங்களை எப்போதும் எடுத்தாள்வது, நமது சொந்த வரிகளுடன் வழக்கம். வேண்டுமென்றால்...எடிட் செய்து...உங்கள் பெயரை இணைத்து விடுகிறேன். அவ்வளவு தான் செய்ய முடியும்.

.............................................




https://www.facebook.com/rprajanayahem/posts/1557924741087653?pnref=story


மேற்கண்ட ராஜநாயஹத்தின் கே. பாலாஜி பதிவை இன்னொரு ஆள் (  ) அப்படியே தன் பதிவாக எடுத்துப்போட்டுக்கொண்டுள்ளான் பாருங்கள் கீழே.
 http://tamilindianfilmssecrets.blogspot.in/.../blog-post...

........................

எவனென்று தெரியவில்லை. "இனியவன் என்றும்" என்ற பெயரில் ஒரு ப்ளாக். என்னுடைய வெற்றிகொண்டான், .வி.கே.சம்பத், பழைய கணக்கு, கண்கள் பனித்தன நெஞ்சம் இனித்தது,கட்சி தலைமை,ஜேப்பியார், நெடுஞ்செழியன்,கண்ணதாசனின் அரசியல் வாழ்வு ஆகிய பிரபலமான பதிவுகளை திருடி அவனுடைய ப்ளாக்கில் தன்னுடையது போல எடுத்துப்போட்டுக்கொண்டிருக்கிறான். 'இடுகையிட்டது ranga rasu' என்று குறிப்பிட்டுள்ளான்.
இப்படி எவனெவனோ செய்து கொண்டிருக்கிறான்.
என் 'சாவித்திரி' பதிவை ஒருவன் இப்படி தன் பதிவாக போட்டுள்ளதை பார்க்க நேர்ந்தது. என் 'எஸ்.வி.ரங்காராவ்' பதிவை மற்றொருவன் தன் பதிவாக போட்டுள்ளதை எனக்கு கவிஞர் மகுடேசுவரன் சொன்னார்.
' ராதா இல்லாத படம் சாதா' என்ற பெயரில் என் பதிவுகளை ஒருவன் பயன் படுத்தியிருக்கிறான்.

நான் 2008ல் எழுதிய ’டவுன் பஸ் கண்ணப்பா’ பதிவை காப்பியடித்து என்ற ப்ளாக்கில் 2012ல் போட்டிருப்பதை கண்டுபிடித்தேன். திருடி போடப்பட்டுள்ள ப்ளாக் லிங்க்.

...

என்னுடைய 'எம்.ஜி.ஆர் பேச்சு' பதிவில் இருந்து ஆனந்த விகடன் (25-9-13) இதழில் திருடிப்போட்டிருக்கிறார்கள். அழகிரி பதிவில் இருந்து திருடி ஆனந்த விகடனில் திருமாவேலன் போட்டது அனைவருக்கும் தெரியும்

குமுதம் பத்திரிக்கை காக்கா ராதாகிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோர் பற்றி நான் எழுதியதை திருடியதுண்டு.

குன்ஹா தீர்ப்பு பற்றி நான் எழுதியதை ஜூனியர் விகடன் கழுகார் பதிலில் எடுத்துப்போட்டார்கள்.


.................................................................


http://rprajanayahem.blogspot.in/…/10/untoward-incident.html
http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_12.html
http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_07.html

Nov 16, 2016

பிள்ளைப் பிராயத்திலே



ஐந்தாம் வகுப்பு  படித்து முடித்திருந்த நேரம். ரிசல்ட் வரவில்லை. 
மே மாத லீவு. அடுத்த மாதம் ஆறாம் வகுப்பு போகிற த்ரில். 
பக்கத்து வீட்டு பையன் ஒருவன் ’ஆறாவது வகுப்பு ரொம்ப கஷ்டம்.ரொம்ப ரொம்ப கஷ்டம். ஐந்தாவது மாதிரி ஜாலியா இருக்கலாம் என்று நினைச்சுக்காதே’ என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் அப்போது ஆறாம் வகுப்பு பரிட்சை எழுதியிருந்தான்.
மே மாத லீவு என்பதால் எதிர்த்த வீட்டுக்கு தேவகோட்டையில் இருந்து ஒரு பையன் – பெயர் ராஜாராம் – வந்திருந்தான். துறு துறு என்று இருந்தான். 
என்னிடம் வந்தான். ’துரை! இந்த திருச்சியில் காவிரியாறு பார்த்திருக்கியா? உச்சிப்பிள்ளையார் கோவில் போயிருக்கியா? பொன்மலை பார்த்திருக்கியா?’ என்றான். 
’இல்லண்ணா! உன் பேரு ராஜாராமா?’
 ’ஆமா. தேவகோட்டையில் ஏழாங்கிளாஸ் படிக்கிறேன். அடுத்த வருடம் எட்டாப்பு’
‘ஆறாங்கிளாஸ் ரொம்ப கஷ்டமாண்ணா! ’
’யாரு சொன்னா! ரொம்ப ஈசி. ஒன்னு தெரிஞ்சிக்க. பயந்தீன்னா எதுனாலும் கஷ்டம் தான்.’
’சரி. இன்னைக்கி பொன்மலைக்கு போவமா?’
’வழி தெரியாதேண்ணா!’
’போறப்ப விசாரிச்சிக்கிட்டே போலாம். நான் இந்த ஊரே கிடையாது. நான் உன்னை கூட்டிட்டுப் போறேன் பாரு.’

வீட்டிலிருந்து கிளம்பி பொன்மலையைப் பார்த்துக்கொண்டே, வழி விசாரித்துக்கொண்டே போய் மலையில் ஏறி உச்சியில் உட்கார்ந்தோம். விமான நிலையம் தெரிந்தது. நல்ல உச்சி வெய்யில். ஒரு விமானம் வந்து இறங்கியது. ரொம்ப சந்தோஷம். குஷி. பின் விமானம் கிளம்பியது. பத்து வயதுக்கு இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமாயிருந்தது. இந்த அட்வெஞ்சர் பெருமையாயும் இருந்தது.
அடுத்த நாள் உச்சிப்பிள்ளையார் கோவில். அதற்கடுத்த நாள் காவிரியாறு.
இந்த மூன்று நாளில் வீட்டில் இருந்த நேரங்களில் ராஜாராம் அண்ணா ஒரு Folk song சொல்லிக்கொடுத்தான்.
பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது. ராஜாராம் அண்ணா ஒவ்வொரு வரியாக சொல்லிக்கொடுத்தான்.
ஒரு கோமாளியிடம் அவன் பெண்டாட்டி வேலை செய்யலாம் வா என்று  சொல்வதாகவும் அதற்கு அந்தக் கோமாளி தட்டிக்கழித்துப் பதில் சொல்வதாகவும் அந்த நாடோடிப் பாடல்.
”கீரை வெதப்போம் கீரை வெதப்போம் வாடா கோமாளி
கீரை வெதச்சா கோழி கிண்டும் போடி நா மாட்டென்.
கோழி கிண்டுனா வேலி கட்டுவொம் வாடா கோமாளி
வேலி கட்டுனா வெள்ளாடு தாவும் போடி நா மாட்டென்.
வெள்ளாடு தாவுனா கால வெட்டுவொம் வாடா கோமாளி
கால வெட்னா தெண்டம் விழும் போடீ நா மாட்டென்
தெண்டம் விழுந்தா வேலை செய்வோம் வாடா கோமாளி
வேல செஞ்சா முதுகு வலிக்கும் போடீ நா மாட்டென்
முதுகு வலிச்சா சோறு தர்றேன் வாடா கோமாளி
சோறு தின்னா ஏப்பம் வரும் போடீ நா மாட்டேன்
ஏப்பம் வந்தா ( உன்ன ) குழியில வக்கிறேன் வாடா கோமாளி
குழியில வச்சா கறையான் பிடிக்கும் போடீ … நா… மாட்டென்.”

நான்காவது நாள் ராஜாராம் அண்ணா ஊருக்கு கிளம்பி விட்டான்.
அந்த நான்கு நாள் நட்பு இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.


இந்த நாட்டுப்புறப் பாடலைப் பள்ளியிலும் பின் கல்லூரியில் படிக்கிற காலங்களிலும் எத்தனையோ முறை நான் பாடியிருக்கிறேன்.


இப்போது டி.வி.யில் சமீபத்தில்  ஏதோ சேனலில் அஜீத் படப் பாடலாக இதே பாடல் பார்க்கக் கிடைத்தது.

Nov 14, 2016

Mounting on two horses



Italy offers Robert De Niro asylum after Trump win if he is serious about leaving the country

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ அமெரிக்க அதிபர் தேர்தலின் போது “ ட்ரம்ப் ஜெயிச்சா நான் இத்தாலிக்கு போயிட வேண்டியது தான்” என்று சொன்னார்.

Straddling two cultures or standing between two stools?
இப்ப இத்தாலிக்கே வரச்சொல்லி அங்கே ஃபெர்ரஸ்ஸானோ மேயர் அழைப்பு விடுத்திருக்கிறார். Asylam! இத்தாலி அடைக்கலம் கொடுக்கத்தயார்.
Italy! Your Motherland? Italy! Your people cry for you?
இத்தாலிக்கு போய் நீரோ பிடில் வாசிக்கவா முடியும். பொழப்பு அமெரிக்காவில இருக்கும்போது இத்தாலிக்குப் போய் ’சிங் சிங் சான்’ சிங்கியடிக்க என்ன தேவை!?
பொழக்கிற இடம், பொழச்ச இடம் தான் சொந்த தேசம். சோறு கண்ட இடம் தானே சொர்க்கம்!

Diaspora! So, here too foreign for Italy, too foreign for America, never enough for both! Straddling two cultures or falling between two stools?
....................

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றி ஒரு ஜுரம் இங்கே இருக்கிறது. எட்டு வருடங்களுக்கு முன் ஒபாமா ஜெயித்த போது உலகமே ரட்சிக்கப்பட்டு விட்டது போல இந்தியாவில் ஒரு கொண்டாட்ட மனநிலை. கறுப்பர் வந்ததால் என்ன மறுமலர்ச்சி..
அமெரிக்க ஜனாதிபதி எப்போதுமே ’உலகத்தின் நம்பர் ஒன் பேட்டை ரௌடி’ தான்.
டெமாக்ரடிக் பாட்டியா இருந்தா என்ன? ரிபப்ளிக் தாத்தாவா இருந்தா என்ன? எப்பவுமே அமெரிக்க அதிபருக்கு ஒரே முகம் தானே! பழைய கருப்பன் கருப்பனே!
உலக அரசியலுக்கு, வாழ்வுக்கு என்ன பெரிய மாற்றம், மறுமலர்ச்சி நிகழ்ந்து விடப்போகிறது.
இதில் யார் ஜெயித்தால் தான் என்ன? அந்தப் பதவி பற்றி நிறைய பிரமைகள் இந்தியர்களுக்கு எதற்கு?
ட்ரம்ப் ஜெயிப்பான்… ஹிலாரி ஜெயிப்பா
விவாதங்கள்….
ஏன் அவ ஜெயிக்கக்கூடாது… அவ ஜெயிச்சா பிரச்னை ..
ஏன் இவன் ஜெயிக்கக்கூடாது…. இவன் ஜெயிச்சா ப்ராப்ளம்!
................................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_4039.html

http://rprajanayahem.blogspot.in/…/…/tom-hanks-in-sully.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/…/03/hello-goodbye-hello.h…




Nov 12, 2016

பேரன் பால் பேரன்பு


ஒன்றாம் வகுப்பு முடித்து மே மாதம். செய்துங்க நல்லூரில் அப்போது தாத்தா பாட்டி வீட்டில் ஜாலியாக இருந்தேன். தாத்தா வீட்டை ஒட்டிய எங்கள் வீட்டில் வாடகைக்கு ஒரு குடும்பம். அந்த வீட்டில் ஒரு திருமணம். தாத்தா வீட்டையும் சேர்த்து பந்தல் போட்டார்கள். அந்த பந்தல் அந்த வயதில் எனக்கு தந்த ஆனந்தம் அலாதியானது. பந்தல் காலில் தொங்கி ஆடி விளையாடி…குதித்து…தவ்வி.. பந்தலின் கூரையை அண்ணாந்து பார்த்து பார்த்து .. ஆஹா….. பந்தல் என்பது எனக்கு எப்போதும் வேண்டும்…. பந்தல் தான் என்ன அழகாயிருக்கிறது.

பக்கத்து வீட்டு கல்யாணம் முடிந்த நான்காம் நாள் காலை பந்தலை பிரிக்க ஆரம்பித்தார்கள். விறு விறு என்று பிரிப்பு வேலை.
நான் பந்தல் பிரிக்கிற ஆட்கள் இருவரிடம் பந்தலை பிரிக்க வேண்டாம் என்று கிடைத்த கொஞ்ச அவகாசத்தில் அந்த வயதிற்கேற்ற சொல்லாடல் செய்தேன். அவர்களில் ஒரு ஆள் சொன்னான் ‘ கல்யாணம் நடந்துச்சுன்னா தான் பந்தல் போட முடியும்’
திகைத்துப்போய் விட்டேன். பந்தல் காணாமலே போய்விட்டது.

நேரே தாத்தாவிடம் போய் “ எனக்கு கல்யாணம் இப்பவே இன்னக்கே நடக்கனும்” என்றேன். சாராயக்கடைக்கடை ராஜ நாயஹம் பிள்ளைக்கு சிரிப்பு. பொக்கைவாய் திறந்து சிரித்தார்.

தொழுவத்தில் இருந்து பால் கறந்து விட்டு வந்த பாட்டியிடம் ஓடிப்போய்
 “ ஆச்சி! எனக்கு இப்பவே இன்னக்கே கல்யாணம் நடக்கனும். உடனே பந்தல் போடனும்”
ஆச்சி பெரிய செம்பில் இருந்த கறந்த பச்சை பசும்பாலை
“ ஒரு வாய் முத இத குடி!” என்று கெஞ்சினாள். என் ஆச்சி எப்போதும் ஃப்ரெஷ்ஷா பால் கறந்தவுடன் எனக்கு நுரை ததும்பும் பச்சை பாலை வாயில் குடிக்க கொடுப்பாள். அது அவள் வழக்கம். உற்சாகமாக குடிப்பது என் வழக்கம்.

ஆனால் அன்று நான் மறுத்து விட்டேன். ” எனக்கு கல்யாணம் உடனே நடக்கனும்” ஆச்சி “ ஏல.. மொதல்ல இந்த பாலை குடி”
”மாட்டேன். எனக்கு கல்யாணம் உடனே நடக்கனும். இன்னக்கே நடக்கனும். நம்ம வீட்டில பந்தல் போடச்சொல்லு.”
கதறி அழ ஆரம்பித்தேன். தரையில் உருண்டு பிரண்டு கை கால்களை உதைத்து..

என் ஆச்சி என்னை தூக்கி இடுப்பில் வைத்தாள்.
“ ஏல அழாத.. இன்னக்கி வேண்டாம். நாளக்கி உனக்கும் எனக்கும் கல்யாணம். நான் தான் உனக்கு பொன்னு.. பந்தல்காரன் கிட்ட போய் இப்பவே சொல்லிட்டு வரலாம் வா.”
தாத்தாவைப் பார்த்து ஆச்சி சொன்னாள் “ அய்யா.. ஒன் பேரன் தொரைக்கும் எனக்கும் நாளைக்கி கல்யாணம். நீரு ஒமக்கு வேற பொன்னு பாத்துக்கிடும்.”
என்னைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

எதிரெ வந்த ஒரு கிழவியிடம் “ ஏட்டி மாரி…. நாளைக்கு என் பேரனுக்கும் எனக்கும் கல்யாணம். வந்திடு.. பந்தல் காரனப் பாக்கத்தான் இன்னா போறேன்.” மாரிக்கிழவி வாயெல்லாம் பல்லாகி
“ ஏயப்ப்பா… அப்படியா.. அப்ப இனி ராஜநாயஹம் பிள்ளை பாடு திண்டாட்டம்”

எதிரே ஒரு சாயபு வந்தார். “ பாய்! நாளக்கி எனக்கும் என் பேரனுக்கும் கல்யாணம்..எல்லாரிட்டயும் சொல்லிடுங்க..”

பஸ் ஸ்டாப்பை ஒட்டியிருக்கும் அய்யர் ஓட்டல் ராஜ நாயஹம் பிள்ளை காம்பவுண்டை சார்ந்தது தான். அய்யர் வாடகைக்கு எடுத்து ஓட்டல் நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய அம்மாள் என் பாட்டியைப் பார்த்து
“ வள்ளி! என்னடி? ஒன் பேரன் அழுதுண்டு இருக்கான்.”
“ மாமி! என்ன உடனெ கல்யாணம் பண்ணனும்னு அழறான். பந்தல்காரனப்பார்க்கத்தான் போயிட்டிருக்கோம்.”
“ பேஷ்! துரைக்கேத்த துரைச்சானி தான்!”
எதிர்ப்பட்ட எல்லாரிடமும் ஆச்சி முரசறையாத குறையாக செய்தியை பரப்பிக்கொண்டே என்னை தன் இடுப்பில் வைத்துக்கொண்டே தான் கொசக்குடிக்கு போனாள்.
ஆறு வயது பையனை இறக்கி நடக்க விடலாம். ஆனால் ஆச்சி இடுப்பில் சுமந்து கொண்டே தான் போனாள். பேரன் பால் பேரன்பு. என் அப்பாவை பெற்ற ஆச்சி!
கொசக்குடிக்கு போனவுடன் பந்தக்காரனிடம் “ ஏல..ஏம்ல எங்க வீட்டில இருந்து பந்தல பிரிச்ச.. கூறு கெட்ட பயலே... நான் சொன்னேம்லலே. எனக்கும் என் பேரனுக்கும் கல்யாணம்னு சொன்னேனா? இல்லையாலே… அப்புறம் ஏம்ல பந்தல பிரிச்ச.....செத்த மூதி.. மருவாதியா ஒடனே பந்தல போடு….”
பந்தல் உடனே வீட்டில் போடப்பட்டு விட்டது. பந்தலைப் பார்த்த சந்தோஷம். ஆஹா பந்தல்! பந்தல் தந்த திருப்தி!
’கல்யாணம்’ என்பதே எனக்கு அன்றைக்கே உடனே,உடனே சுத்தமாக மறந்தே போய்விட்டது.

.........................................
photos
1. மூன்று வயதில் ராஜநாயஹம்
2. ஒன்பது வயதில் ராஜநாயஹம்

http://rprajanayahem.blogspot.in/2016/09/blog-post_16.html

http://rprajanayahem.blogspot.in/2016/05/blog-post_27.html

http://rprajanayahem.blogspot.in/…/raise-child-you-have-got…

http://rprajanayahem.blogspot.in/…/carry-your-childhood-wit…

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2014/06/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_1605.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_1605.html